நீதிமன்றத்துக்காகக் காத்திருக்க முடியாது: தேச நிந்தனைச் சட்டம் மீதான விவாதம் தொடங்குகிறது

pand1948 தேச  நிந்தனைச் சட்டத்தில்  திருத்தங்கள்  செய்யும்  சட்டவரைவைத்  தள்ளிவைக்க  வேண்டும்  என்று  கோபிந்த்  சிங்  டியோ கொண்டுவந்த  தீர்மானத்தை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார் அமின்  மூலியா  புறந்தள்ளினார்.

தேச நிந்தனைச்  சட்டம்  அரசமைப்புக்கு  இணக்கமானதா  என்று  ஆராயும்  வழக்கு  கூட்டரசு  நீதிமன்றத்தில் இன்னும்  விசாரணை  நிலையில்  இருப்பதாக கோபிந்த்  கூறினார்.

“நீதிமன்றத்தில்  விசாரணை நிலையில்  உள்ள வழக்கு  சட்டவரைவுக்குத்  தடையாகாது”, என பண்டிகார்  குறிப்பிட்டார். இந்திய  நாடாளுமன்றத்தில்  இதேபோன்றதொரு  முடிவு  செய்யப்பட்டிருப்பதாகவும்  அவர்  சொன்னார்.

எனவே,  சட்டவரைவுமீது  விவாதம்  செய்யலாம்  என்றாரவர்.