ஊழியர் சேமநிதி (இபிஎப்) சந்தாதாரர்கள் அவர்களின் பணத்தை 55 வயது தொடங்கிக் கட்டம் கட்டமாக மீட்டுக்கொள்ள அனுமதிக்கலாம் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
பணமீட்பு வயதை 55-இலிருந்து 60-க்கு உயர்த்த இபிஎப் எண்ணியிருப்பதாக வெளிவந்த செய்திக்கு எதிராக சந்தாதாரர்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அவர் இப்படி ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்தார்.
55 வயதில் பணத்தை மீட்டுக்கொள்ள இடமளித்தால் சில ஆண்டுகளிலேயே சேமித்த பணத்தை முடித்து விடுவார்கள் என்ற இபிஎப்-பின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக ரபிஸி கூறினார்.
“அதைக் கருத்தில்கொண்டு இபிஎப் சந்தாதாரர்கள் 55 தொடங்கி 60-வயதுவரை கட்டம் கட்டமாக பணத்தை மீட்பதற்கு அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.
“உதாரணத்துக்கு, சந்தாதாரர்கள் 55-வயதில் 60 விழுக்காட்டுப் பணத்தையும் மீதமுள்ள 40 விழுக்காட்டை 60-வயதிலும் மீட்டுக்கொள்வதென முடிவு செய்யலாம்”, என ரபிஸி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அல்லது 50:50 அல்லது 40:60 என்றுகூட பணத்தை மீட்டுக்கொள்ளலாம். அதை அவர்களின் விருப்புரிமைக்கு விட்டுவிடலாம் என்றாரவர்.
வணக்கம்..அவர் அவர் பணம் அவர் அவரிடத்தில் ஒப்படைப்பதில் நீங்கள் ஏன் கணக்கு போடுகிறிர்கள் அந்த நபர் முடித்தாலும் சரி இல்லை 5 வருடம் கலித்து முடித்தாலும் சரி…அவர்களுடைய விருப்பம் தானே …
ஊழியர்கள் சேமித்த பணத்தை சந்தாதாரர்களே நிர்ணயம் செய்யட்டுமே!!! சேமநிதி வாரியம் அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கினால் போதுமானது… இறுதி முடிவு உரிமையாளர்களிடம் விட்டுவிட வேண்டியதுதானே!!!!
இப்போது பணம் தேவைப்படுகிறது. இ பி எப்பில் கை வைக்க இப்படி ஒரு வியுகம். இன்னும் எதில் எதில் சேட்டை நடக்க போகிறதோ.?
போங்கடா அஞ்சடி நா…ளே EPF 55 வயதில் எடுக்க விடா முடியாமல் தடுக்கிரானோ அவனை மக்கள் அ..க வேண்டும்………….நஜிப் குடும்பமே அ……….ணும்