முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சிறையின் இரும்புக் கம்பிகளோ காங்கிரீட் சுவர்களோ நாட்டின் அரசியல் நடப்புகளை அவர் அறிவதற்குத் தடையாக இல்லை.
அந்த வகையில்தான் இப்போது டாக்டர் மகாதிர் முகமட்டுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குமிடையில் நடக்கும் சர்ச்சையையும் அன்வார் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
அண்மையில் அவரின் குடும்பத்தார் அவரைக் காணச் சிறைக்கூடத்துக்குச் சென்றிருந்தபோது அது பற்றி அவர் அவர்களிடம் விசாரித்துள்ளார்.
“கடந்த வெள்ளிக்கிழமை அன்வாரை அவரின் தந்தையின் இறப்புக்குப் பின்னர் முதன்முறையாகச் சந்தித்தோம். அவர் திடமாக இருக்கிறார், தெளிவாக இருக்கிறார், அடிக்கடி திருக்குர்ஆனையும் வாசிக்கிறார்.
“சிலாங்கூர் பற்றி, மக்களைப் பற்றி, பொருளாதாரத்தைப் பற்றி முன்னாள் பிரதமருக்கும் நடப்புப் பிரதமருக்குமிடையிலான ஊடல் பற்றி நிறைய வினவினார்”, என்று அவரின் துணைவியாரும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கெஅடிலான் நாளேட்டிடம் தெரிவித்தார்.
அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் அன்வாருக்கு நண்பனாக
போகிறவர் யார் ? மகாதீரா ??? நஜிப்பா ??? என்பதுதான் கிளைமாக்ஸ் !