கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங், பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் ஓர் ஆலயத்தின்முன் கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள் அதன் சுவரிலிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றிய செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஆலயத்தின்முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அப்பகுதியில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதும் அது மலாய்க்காரர்கள்/முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி என்று கூறிக் கொண்டார்கள்.
“இச்சம்பவம் இந்நாட்டில் கிறிஸ்துவர்களை அச்சுறுத்தும் போக்கு துடுக்குத்தனத்தின் உச்சத்தை எட்டியிருப்பதைக் குறிக்கிறது”, என மலாக்கா-ஜோகூர் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயத் தலைவரான டாக்டர் பால் கூறினார்.
“கிறிஸ்துவர்களை மிரட்டுவது செல்வாக்கை இழந்துவிட்டு அதைத் திரும்பப் பெற முயலும் அரசியல்வாதிகளின் பொழுதுபோக்காக மாறியுள்ளது”, என்றாரவர்.


























ஆயரே, எங்ககிட்ட வாலாட்டுகின்ற மாதிரி அவங்க கிட்ட வாலாட்டுனா ஓட்ட நறுக்கிடுவாங்ன்னு சொல்லாம சொல்றாங்க. யார் யாருக்கு எங்கெங்கே அரசியல் ஆத்திகம் இருக்கோ அங்கங்கே அவர்கள் வச்சதுதான் சட்டம். அதிலும் அந்த மதத்தில் மறு பேச்சு பேசினா அப்புறம் வாள் வீச்சுதான் வரும். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே வாய் வீச்சு வெச்சுக்குங்க.
துடுக்கான செயல் அல்ல.அது ஒரு காட்டுமிராண்டித் தனமான செயல்.அவர்கள் IS தீவிரவாதிகளைப் போல் கற்காலத்துக்கு செல்ல முற்படுகின்றனர்.நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு முன்னெடுக்க செல்லவிடாமல் இனங்களிடையே ஒருமைப் பாட்டை குலைக்க செய்ய மத தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளனர்.இது வெட்ககேடான ஓன்று.
போலிஸ் தலைவர் அவர்களும், சட்டத்துறை தலைவரும்
ஆர்ப்பட்டகாரர்கள் மீது போடா சட்டத்தை பயன்படுத்த தைரியம் இருக்கா ?? முடியாதே அவர்களில் ஒருவர் நம் போலிஸ் தலைவரின் சகோதரர் என்பதாக கேள்வி!!!! பார்போம் என்ன செய்கிறார்கள் என்று.
அந்த பகுதி மக்கள் ஆர்ப்பட்டகாரர்களுக்கு எதிராக போலிஸ் புகார் செய்யலாமே…..