அம்னோ உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால், டாக்டர் மகாதிர் முகம்மட் எழுப்பிய விவகாரங்களுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விவரமாக விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மற்றவர்களைவிட கட்சியும் அரசாங்கமும் அதற்கு விளக்கமளிப்பது மேல் என்றாரவர்.
“அவர் பல கேள்விக்ளை முன்வைத்துள்ளார். அவற்றுக்கு விவரமாக விளக்கமளிப்பது அவசியம்.
“அது முக்கியமாகும். ஏனென்றால் அந்த விளக்கமளிப்பு மகாதிருக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் நம்பிக்கையை உண்டாக்கும்.
“தலைமைக் கணக்காய்வாளருக்காகவும் பொதுக் கணக்குக் குழுவுக்காகவும் காத்திருக்கும் வேளையில் தகவல்களை வைத்திருப்பவர்கள், நிதி அமைச்சு போன்றவை, தெள்ளத் தெளிவாக விளக்கமளிப்பது முக்கியமாகும்”, என்று ஷாபியை மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.

























துன் மகாதீருக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் தெளிவான விளக்கத்தினை கொடுப்பது பிரதமரின் கடமை.
இதெல்லாம் விவரித்து கடை விரிக்கிற விஷயமா என்ன?. சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாமாக்தீர் பக்கம் சாயுரதாக தெரியுது. இது கூடிய விரைவில் பனிப்பந்து போன்று பெரியதாகுமோ?. பொறுத்திருப்போம்.
கடவுள் இருக்கின்றார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!