கிறிஸ்துவர்கள் புனிதமாக போற்றும் சிலுவையை அகற்றக்கூடாது என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி.
“சிலுவை கிறிஸ்துவர்களுக்கு ஒரு புனிதமான சின்னம்.
“அச்சின்னத்தை அகற்றுமாறு கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. அது கிறிஸ்துவ சமூகத்தை அவமதிப்பதாகும்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று, பெட்டாலிங் ஜெயா, தாமான் மூடாவில் ஒரு தேவாலயத்துக்குமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேவாலயச் சுவரிலிருந்த சிலுவை அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது பற்றி அஸ்மின் இவ்வாறு கருத்துரைத்தார்.

























மாநில அரசாங்கத்திற்குத் தெரியுது மத்திய அரசாங்கத்திற்குத் தெரியவில்லையே!.
நன்றி அஸ்மின்
திறந்த மனம் .நன்றி.
உண்மையான மனிதர், மற்றவர்கள் நம்பிக்கைகளில் ஏன் கை வைப்பானேன் ?
இடர்கள் வருவது குடாது,அது யாரால் வருகிறதோ அவர்களுக்கு “ஐயோ”. கர்த்தர் இயேசு நியாயம் தீர்ப்பார்,மறப்போம் மன்னிப்போம்.
இயேசு சொன்னார் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்.உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எனவே மன்னிப்போம் மறப்போம்…
ஆர்ப்பாட்டம் காரணமாக, சிலுவைச் சின்னத்தை அகற்றினார்கள், சம்மந்தப்பட்டோர். எந்தவித அசம்பாவிதமோ, பிரச்சினையோ ஏற்படாதிருக்க அவர்கள்,சிலுவையை இறக்கியதால், உயர்ந்து காணப்படுகின்றனர். பொதுவாக எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றனர். ஒருசில அவசர மனிதர்கள்தான், மனிதக் குலத்திற்கே தீங்கானவர்கள்.
abi நன்றாகவே சொன்னீர். அன்று கமாலியேல் யூத மத தலைவர்கள் சபையில் ‘இவர்களை (இயேசுவின் சீடர்கள்) விட்டுவிடுங்கள், இவர்கள் போதிப்பது மனித போதனை என்றால் அது சிறிது காலத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ஆனால் அதுவே இறை சித்தமானால் அதனை நாம் தடுக்கவும் கூடாது, தடுக்கவும் முடியாது ‘ என்று. புனித பவுல் அடியாரும் எற்றுக்கொல்வோருக்கு சிலுவை மீட்பளிக்கும் சின்னமாகவும் எற்றுக்கொள்ளதவர்களுக்கு அதுவே தீர்ப்பளிக்கும் சின்னமாகும் இருக்கும் என்று கூறியுள்ளார். சிலருக்கு சிலுவையை கண்டாலே பயம். ஏன் என்று தெரியவில்லை.பல,ஏன் எல்லா மறைசாட்சியரும் அவரவர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை தாம் இறக்கும் முன் மன்னித்தே இறந்தனர். கிழக்கு மலேசியா கிறித்தவ சபையார் கூறுவது போல சர்ச்சை செய்தவர்களை தண்டிப்பதைவிட அவர்களுக்கும் அவர்களை போன்றோருக்கும் அடுத்தவர் நலமதனை காக்க ஆழ்ந்த முறையில் வலியுறுத்த வேண்டும். கிள்ளானில் கிறித்தவ தேவாலையம், இந்து ஆலயம் மசூதி மற்றும் ஒரு சீனர் கோயில் (எந்த சமயம் என்று எனக்கு தெரியவில்லை) அனைத்தும் ஒரு வட்டத்திற்குள் இருந்தும் எவ்வித பிரச்சினையும் இன்றி நான் பிறக்கும் முன்பிருந்தே செயல்படுகின்றனவே. இவ்வட்டம் சிம்பாங் லிமா வட்டத்திலிருந்து, ஜாலான் துங்கு கெளானா சாலை வழி உள்ள இடமாகும். இவ்விடத்தை நான் ஒரு தெய்வ பூமியாகவே குறிப்பிடுவதுண்டு. வெளியூர் நண்பர்கள் கிள்ளானுக்கு வந்தால் வியாபார தளங்களை மட்டும் பார்த்து பொருள் மட்டும் வாங்கிக்கொண்டு போகாமல், இந்த புனித தளங்களையும் கண்டு அங்கு வாழும் மக்களின் நல்லிக்னக்கத்தையும் உணர்ந்து செல்லுங்கள். நம் எல்லோரையும் இறைவன் வெகுவாக ஆசீர்வதிப்பாராக.