சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றிலிருந்து அகற்றப்பட்ட சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைப்பதற்கு உதவ வேண்டும் என கெராக்கான் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்பிரிவின் தலைவர் டான் கெங் லியாங், மாநில அரசு இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“அஸ்மின் அலி மேலும் தாமதிக்காமல் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும். கடந்த ஆண்டு பிஎஸ்எம் கிறிஸ்துவ பைபில்களை சிலாங்கூர் அரசுத் துறையொன்று பறிமுதல் செய்த விவகாரத்தைப் போன்று இதையும் இழுத்துக் கொண்டே போகக் கூடாது”, என்று டான் கூறினார்.

























அவர்கள் அம்னோ மீது விழும் மரண அடியை திசை திருப்ப ஒரு கதையை ஏற்படுத்தினால் நீங்களும் அவர்களுக்கு ஏற்றவாறு வாத்தியம் பாடுவது ஏன் என்ற டவுட் எனக்கு வருது. பொறுத்திருங்கள் பெர்மாத்தாங் பௌ தேர்தல் முடியட்டும். அப்புறம் எடுத்து வச்சுவிக்கிங்க.
அமினோ கைப்பிள்ளைகள் பிள்ளையைக் கிள்ளி விட்டால் மாநில அரசு தொட்டிலை ஆட்ட வேண்டுமோ?. நல்ல அரசியல் நாடகம்.
உங்க கெரக்கான் கட்சி உதவ முடியாதா?. அப்புறம் எதுக்கு கட்சி வச்சிருக்கிங்க? சும்மா வேற ஆளைக் காட்டி விட்டு தான் தப்பித்துக் கொள்ளும் தந்திரம் இனியும் பலிக்காது பொடியனே. முடிந்தால் களம் இறங்கு. இல்லையேல் பேசாம வாயை பொத்திக்கிட்டு இரு.
சிலுவையை அகற்றச் சொன்ன உமது கூட்டுறவான அம்னோவிடம் போய் இதனைச சொல்!!! . உமது கீழ்த்தனமான அரசியல் நோக்கத்தினை இங்கு தெரிவிக்க வேண்டாம்!!!!
போச்சிட 2 வாரத்துக்கு சிலுவை போர் ஓயாது.சிலுவையை வச்சி மா இ காரனுங்க நாத்தம் புடிச்ச திருவாய திறக்க ஆரம்பிப்பானுங்க. ஒண்ணுக்கும் உருபிடாத கெரக்கான் வாய திறந்திட்டான்.