தேவாலயத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரின் சகோதரரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் அது பற்றிக் கருத்துரைக்கக் கூடாது என டிஏபி எம்பி டோனி புவா கூறினார்.
விசாரணை என்று எதுவும் தொடங்குமுன்னரே அதில் விசாரிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறியதே ஐஜிபி-இன் நடுநிலைப்போக்கையும் அவரின் தீர்ப்புரையையும் கேள்விக்குரியதாக்குகிறது என்றாரவர்.
எனவே, விசாரணைக்கு துணை ஐஜிபி நூர் ரஷிட் இப்ராகிம்தான் தலைமை தாங்க வேண்டும். விசாரணை நடத்தி முடித்து விசாரணை அறிக்கையை உள்துறை அமைச்சரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என புவா கூறினார்.


























விசாரிப்பதற்கு ஏதுமில்லை என்றால் பிரச்சனை என்று ஒன்றும் இல்லை என்று அர்த்தம்!