ஐஜிபி-இன் இரட்டை நியாயம்: சாடுகிறார் அம்னோ உறுப்பினர்

saiமுன்னாள் அம்னோ  எம்பியான  சைபுடின்  அப்துல்லா  ஆர்ப்பாட்டங்களின்  விசயத்தில்  போலீஸ்  இரட்டை  நியாயத்தைக்  கடைப்பிடிப்பதைக்  கண்டு  அதிருப்தி  அடைந்துள்ளார்.

எதிரணி-ஆதரவு  கித்தா  லவான் பேரணிகளின்போது  பல  சமூக  ஆர்வலர்களையும்  நாடாளுமன்ற  உறுப்பினர்களையும்  விசாரணைக்காக  போலீஸ்  கைது  செய்திருக்கிறது.

ஆனால்,  ஞாயிற்றுக்கிழமை அம்னோ-தொடர்புள்ளவர்கள் தாமான்  மூடாவில்  ஒரு  தேவாலயத்துக்கு  எதிராக  ஆர்ப்பாட்டம்  நடத்தியபோது  மட்டும்  அங்கு  நடந்ததை  அறிந்துகொள்ள  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  தம்  சகோதரரைத்  தொலைபேசியில்  அழைத்து  விசாரித்திருக்கிறார்.

“இந்த  ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவர்களை  ஐஜிபி-யால் தொலைபேசியில்  அழைத்து  விசாரிக்க  முடிகிறபோது மற்றவர்கள்  மட்டும்  ஏன்  இரவுப்பொழுதை லாக்-அப்பில் கழிக்க  வேண்டும்?”, என   முன்னாள்  தெமர்லோ  எம்பியும்  முன்னாள்  உயர்கல்வி  துணை  அமைச்சருமான  சைபுடின்  வினவினார்.