ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு இலக்கான தேவாலயம் அது வழிபாட்டு இல்லமாக செயல்பட அனுமதி பெற்றிருக்கவில்லையாம். கடைவீட்டைத் தொழுகை இடமாக மாற்ற அனுமதி கேட்டு அது இதுவரை விண்ணப்பம் செய்யவில்லையாம்.
ஒரு கடைவீட்டை வழிபாட்டு இல்லமாக மாற்ற நினைத்தால் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என பிஜே மாநகராண்மைக் கழக(எம்பிபிஜே) பொது உறவு அதிகாரி சைனுன் ஜக்கரியா கூறினார்.
“அவர்கள் அதற்கு மனு செய்யவில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.


























மாநகராண்மை கழகத்தின் ஒப்புதலை பெறாமல் கடைவீட்டை வழிபாட்டு இல்லமாக செயல்படுத்தியது தவறுதான். இது, பொது உறவு அதிகாரிக்கு முன்னமேயே தெரியாமல் போனதென்ன? ஆர்பாட்டக்காரர்கள் கூட்டம் கூடுவதற்கு முன்னாள் இந்த பொது உறவு அதிகாரியை அல்லவா சந்தித்திருக்க வேண்டும்? செய்வதையும் செய்துவிட்டு, பிறர் மீது குற்றம் காணுவதே நம் நாட்டில் இப்போது பிழைப்பாக போய்விட்டது.
அப்படியானால் இனி கடை வீதிகளில் ‘Chapel’ அமைக்கப் படுவதற்கும், தியான மன்றங்கள் அமைப்பதற்கும், பாபா நிலையங்கள் அமைப்பதற்கும், யோகா மன்றங்கள் அமைப்பதற்கும் அங்கே வழிபடுவதற்கும் ஆப்பு வச்சுடுவானுங்கோ. அவர்கள் கண்ணுக்கு எட்டின தூரத்திற்கு எதையும் அமைக்க அனுமதி இல்லை என்று பதில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒண்ணுமில்லை. உடனே ஒரு விண்ணப்பம் போடுங்கப்பா. ஆளுக்கொரு சட்டம் பேசுது இந்த நாடு.
ஒரு கடவுளைக் கும்பிட இந்த நாட்டுல எவ்வளவு சட்டங்களை தாண்ட வேண்டி இருக்கப்பா. அப்புறம் எதற்கு ருக்குன் நெகராவில் ‘Kepercayaan kepada Tuhan’ போட்டிருக்காங்க? நம்ம இந்துக்கள் செம கெட்டி. இந்த பிரச்சனை எல்லாம் வேண்டாம்முன்னு சொல்லி ஆளுகொரு வீட்டில் ஒரு கோவிலைக் கட்டிக் கொள்கின்றார்கள். இனி கிறிஸ்துவர்களும் அவ்வாறே செய்வீர்களாக!.
இந்த நாட்டில் நேரத்திற்கு ஒரு பேச்சு என்பது உண்மையிலும் உண்மை. இப்ப வியாபார கட்டட வளாகங்களில் தொழுகை இடங்களை மேற்கொள்ள சிறப்பு அனுமதி தேவையில்லை என்று 2008-ம் ஆண்டிலிருந்து விலக்கு உள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகின்றாராம். எல்லோரும் இப்ப எந்த சட்டத்தைப் பற்றி பேசுகின்றார்கள் என்றே தெரியவில்லை. ஆளுக்கொரு சட்டம். அவனவன் மந்திரி. அவனவன் வைத்ததே சட்டம். இன்னும் அதிகமாகவே குழம்புது.
அனுமதி இல்லை என்று உங்களுக்குத் தெரியும். அப்புறம் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? காலாகாலமும் லஞ்சம் வாங்கிகொண்டே இருக்கலாம் என்னும் எண்ணத்தில் இருந்தீர்களோ? தேவாலயம் கட்ட அனுமதி இல்லை. கட்டினால் இந்த நாடு கிறிஸ்துவ நாடாகிவிடும் என்னும் பயம்! ஒரு கடைவீட்டில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. அனுமதி கொடுத்தால் நாடு கிறிஸ்துவ நாடாகிவிடும்! அடாடா……..! ஒரு இஸ்லாமிய நாடு எது எதற்கெல்லாம் பயப்பட வேண்டியுள்ளது!
எந்த இடமாக இருந்தால் என்ன?அமைதியா இறை வழிபாடு ,பிரார்த்தனை தானே செய்கிறார்கள்.அவர்கள் போல அரசாங்க பணத்தில் பெரிய பெர்ய ஒலிபெருக்கியில் சத்தமாக ….கொண்டு மற்றவர்களை சிரமபடுத்தி கொண்டா இருக்கிஆர்கள்.சட்டங்களை தவறாகவும் ,மற்றவர்களுக்கு எதிராகவும் பயன் படுத்தும் ஒரே நாடு.நம் நாடுதான்.தண்டனை பெற வேண்டியவர்கள் ஆர்பாட்டம் செய்தவர்கள் தான்.