54 ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் நாளை குற்றம் சாட்டப்படுவர்

protest gstகடந்த  மாதம் கிளானா  ஜெயா சுங்கத்  துறை  தலைமையகத்தில்  பொருள், சேவை  வரிக்கு  எதிராக  உள்ளிருப்புப்  போராட்டம்  நடத்தியபோது  கைதான சமூக  ஆர்வலர்களில்  54பேர்  அமைதிப்  பேரணிச்  சட்டத்தை  மீறியதற்காக  நாளை  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவர்.

உள்ளிருப்புப்  போராட்டத்தில்  ஈடுபட்டதற்காக ஏற்கனவே 25 பேர் -அவர்களில்  இருவர்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்- மார்ச்   26-இல்  குற்றம்  சாட்டப்பட்டனர்.

உள்ளிருப்புப்  போராட்டத்த்துக்கு  ஒருங்கிணைப்பாளராக  செயல்பட்ட  ஜாரிங்கான்  ரக்யாட்  தெர்திண்டாஸ் (ஜெர்ஜிட்), குற்றம்  சாட்டப்படும்  ஒவ்வொருவருக்கும் ரிம3,000  பிணைத்  தொகை  நிர்ணயிக்கப்படலாம்   என  எதிர்பார்க்கிறது. ஆக அக்குழுவினர்  மொத்தத்துக்கும்   ரிம162,000  பிணை கட்ட வேண்டியிருக்கும்.

அவர்களில்  சிலர்  ரிம 3,000 பிணைப்பணம் கட்ட  முடியாதவர்களாக  இருக்கலாம். அவர்களுக்கு  உதவி  செய்யுமாறு  அந்த  என்ஜிஓ  முகநூலில்  கேட்டுக்  கொண்டிருக்கிறது.