பாடாங் புசார் மருத்துவமனை- நிறைவேற்றப்படாத இன்னொரு வாக்குறுதி

hospபாடாங் புசார்  மருத்துவமனை  திட்டத்தை  நிறுத்தி  வைக்கும்  முடிவு  அரசாங்கத்தின்  வாக்குறுதியை  நம்பிய  மக்களுக்குக்  கிடைத்த  மற்றுமொரு  ஏமாற்றமாகும்  என பெர்லிஸ்  பிகேஆர்  இளைஞர்  தலைவர் முகம்மட்  ஷாருன்  ரட்ஸி கூறினார்.

2011-இல்  அறிவிக்கப்பட்ட  அத்திட்டத்தைப் பணப்பற்றாக்குறையால்   தள்ளிவைப்பதென  பொருளாதாரத்  திட்டமிடல்  பிரிவு முடிவு  செய்துள்ளது.

“கூட்டரசு  அரசாங்கம்  பிரதமருக்கு  ஆடம்பர   ஜெட் விமானம்  வாங்குவதற்கு  ஆசை ஆசையாய்  ரிம450 மில்லியன்   ரிங்கிட்டைச்  செலவிடுகிறது. ஆனால், பாடாங்  புசார்  மக்கள் மருத்துவ  சிகிச்சைக்காக  40-நிமிடம்  பயணம்  செய்து  கங்காரில்  உள்ள  துவாங்கு  பவுஸியா  மருத்துவமனைக்குச்  செல்ல  வேண்டியுள்ளது.

“அரசாங்கம்  எதற்கு  முன்னுரிமை  கொடுக்கிறது?”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

மருத்துவமனை  போன்ற  முக்கியமான  திட்டத்தைத்  தாமதப்படுத்துவது  ‘மக்களுக்கு  முன்னுரிமை’  என்ற  சுலோகம்  வெறும் அலங்காரச்  சொல்தான்  என்பதைக்  காண்பிக்கிறது  என்றவர்  சாடினார்.