மே7 பினாங்கில் பொது விடுமுறை: சிஎம் அறிவிப்பு

holidayபெர்மாத்தாங்  பாவ்  வாக்களிப்பு  நாளான  மே 7-ஐ  மாநில  பொது  விடுமுறை நாளாக பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங் அறிவித்தார்.

அது  மாநில  ஆட்சிக்குழுவின்  முடிவு  என்றும்  பெர்மாத்தாங்  பாவில்  வாக்களிப்பு  சுமூகமாக  நடப்பதை  உறுதிப்படுத்த  அவ்வாறு  செய்யப்படுவதாகவும்  அவர்  சொன்னார்.

“முதலாளிமார்  இதைக்  கவனத்தில்  கொள்ள  வேண்டும். குறிப்பாக  தனியார்  துறையில்  உள்ளவர்கள்,  பொது  விடுமுறையை  அவர்கள்  கடைப்பிடிக்காவிட்டாலும்  பணியாளர்களை  வாக்களிக்க  அனுமதிக்க  வேண்டும்”, என்றவர்  கேட்டுக்கொண்டார்.

பெர்மாத்தாங்  பாவின் 70,000  வாக்காளர்களில்  குறைந்தது  6,000 பேர்  வெளியூர்களில்  வசிக்கிறார்கள்  என்று  தெரிவித்த  லிம், அவர்கள்  வாக்களிக்க  திரும்பி  வர  வேண்டும்  என்றும்  விரும்புகிறார்.