மார்ச் 28 ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெர்சே இருவர் கைது

bersih1பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லாவும்  அதன் செயலக  உறுப்பினர்  மந்திப்  சிங்கும்  மார்ச்  28-இல்  நடைபெற்ற  கித்தா  லவான் பேரணி  தொடர்பில்  இன்று  கைது  செய்யப்பட்டனர்.

வாக்குமூலப்  பதிவுக்காக டாங்  வாங்கி  மாவட்ட  போலீஸ்  தலைமையகத்துக்கு  அழைக்கப்பட்டிருந்த  அவர்கள்  காலை  11 மணிக்கு  அங்கு  சென்றபோது கைது   செய்யப்பட்டனர்.

பேரணி தொடர்பில்  அவர்களின்  வாக்குமூலங்களைப்  பதிவுசெய்த  பின்னர்  போலீஸ்  அவர்களை  விடுவித்தது.

முன்னதாக, சின்னின்  வழக்குரைஞர்  ஹனி  தான்,   சட்டவிரோத  பேரணி  பற்றிய  குற்றவியல்  சட்டத்தின்  பகுதி 143-இன்கீழ் சின்  கைது  செய்யப்பட்டிருப்பதாக டிவிட்டரில் கூறி  இருந்தார்.

போலீஸ்  நடவடிக்கையை  மக்களை  அச்சுறுத்தும்  முயற்சி  என  கித்தா லவான்  ஓர்  அறிக்கையில்  கூறியது.

“வரும்  வெள்ளிக்கிழமை  நடைபெறவுள்ள  கித்தா  லவான்  பேரணியில் பங்கேற்போரை   அச்சுறுத்தும்  முயற்சிதான்  அது”, என்று  அது  கூறிற்று.