இரவு முழுக்க போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், உத்தரவுப்படி நடந்துகொள்ளும் அடிநிலை போலீஸ் அதிகாரிகளைக் குறைகூற விரும்பவில்லை என்றார்.
அவரது ஆத்திரமெல்லாம் புக்கிட் அமானில் உள்ள அவர்களின் மேலதிகாரிகளின்மீதுதான்.
“என்னை பொறுத்தவரை, உத்தரவுகள் இடுகிறார்களே முகமும் பெயரும் தெரியாதவர்கள், அவர்களே உண்மையில் கோழைகள். எதோ திட்டத்துடன் அவர்கள் வேலை செய்கிறார்கள்.
“களத்தில் பணியாற்றும் போலீசார் நல்லமுறையில் நடந்து கொண்டார்கள். இடப்பட்ட கட்டளைப்படி நடந்து கொள்வதாக அடிக்கடி எங்களிடம் தெரிவித்தார்கள். அவர்களுடன் எனக்கு எந்தத் தகராறும் இல்லை”, என அம்பிகா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி- எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதற்காக வாக்குமூலம் அளிக்கக் கடந்த வெள்ளிக்கிழமை டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்குச் சென்ற அம்பிகாவை சில மணி நேரம் காக்க வைத்துதான் வாக்குமூலம் பதிவு செய்தார்கள்.
“அன்றிரவே எனக்கு அழைப்பு வந்தபோது, மறுநாள் வரை காத்திருக்க முடியாதா என்று என் வழக்குரைஞரும் நானும் கேட்டோம். ஆனால், அன்றே வர வேண்டும் எனப் பிடிவாதமாகக் கூறி விட்டனர். இரவு 9.30 வாக்கில் அங்கு சென்றேன். அதிகாலை 3 மணிக்குத்தான் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது”, என்றார்.
போலீசார் கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அவர்களுக்குள்ள அதிகாரத்தை விசாரணைக்கு உதவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,, ஆனால் அவர்கள் அதைத் “தண்டிக்க”ப் பயன்படுத்திக் கொள்வதாக அம்பிகா கூறினார்.
ஆனால், மெஜிஸ்திரேட்டை அவர் பாராட்டினார்.
மெஜிஸ்திரேட் தம்மையும் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக், பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் ஆகியோரையும் 4-நாள் காவலில் வைப்பதற்கு போலீஸ் செய்த மனுவைப் புறந்தள்ளி சட்டப்படி நடந்து கொண்டதாக அம்பிகா கூறினார்.
காவல் துறையைச் சார்ந்த நல்ல உறுப்பினர்களும், உண்மை அறிந்த மெஜிஸ்திரேட்டும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அம்மையார் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் சட்டம் அவர்களுக்கு மரியாதை செய்கின்றது. மீதம் 27 பேர் பாமரர் என்பதால் நீதி தேவதை கண்ணைத் திருந்துப் பார்த்து போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்க உத்தரவு போட்டாள் போலும்!. இதைத்தான் சனநாயக அராஜகம் என்பது. ஆளுக்கொரு நீதி! ஆளைப் பார்த்து இழைக்கும் அநீதி!.
உங்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை
மற்றவணுங்க போர்வையிலே நடமாடுறது பல தலைவன்களோட நடை முறையாய் விட்டது.
அம்மணி…உங்களை உள்ளே தள்ள ரொம்பே நேரம் ஆகாது..எதோ அரசியல் லாபத்துக்காக நிங்கள் வெளியில் இருக்கிறீர்..இல்லையென்றால் மாமா அன்வாருக்கு துணையாக உள்ளதான் இருக்கணும்..இது கொஞ்ச நாள்தான்..கொஞ்சம் கவனமா இருங்கோ அம்மணி..அப்புறம் எவனும் உங்களுக்காக தெருவில் இறங்க மாட்டான்..