பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் ஒரு வேட்பாளர் அல்லர். ஆனால், நேற்று அங்கு பிகேஆர் செராமா ஒன்றில் அவரைப் பற்றித்தான் முழுக்க முழுக்க பேசப்பட்டது.
200 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அந்நிகழ்வில் சிறப்புப் பிரிவு (எஸ்பி) அதிகாரிகள் இருக்கிறார்களா என்று வினவினார்.
கூட்டத்தினர் “இருக்கிறார்கள்” என உரக்கக் கூறினர்.
“எஸ்பி-களே முன்னுக்கு வாருங்கள். உங்கள் தலைவரைக் கேளுங்கள், அவர் ஐஜிபி ஆக இருக்க விரும்புகிறாரா பிஎன் அல்லது அம்னோவின் கையாளாக இருக்கப் போகிறாரா என்று”. சிலாங்கூர் மந்திரி புசார் இவ்வாறு கூறியதைக் கூட்டத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
“பெர்மாத்தாங் பாவ் மக்களைக் கேட்கிறேன், இப்போதுள்ள ஐஜிபி நாட்டின் பாதுகாப்பைக் கவனிக்கிறாரா அல்லது அம்னோ, பிஎன்னின் பாதுகாப்பைக் கவனிக்கிறாரா? உடனே சொல்லுங்கள்”, என்று அஸ்மின் கோரினர்.
“அம்னோ” என்று கூட்டத்தினர் சத்தமிட்டனர்.
“பிரமாதம். பாராட்டுகள்”, என்றார் அஸ்மின்.
வெள்ளிக்கிழமை, மே தினப் பேரணியில் கலந்துகொண்ட வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் உள்பட எதிரணித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களுமாக சுமார் 30 பேரைக் கைது செய்து தடுத்து வைத்திருந்த போலீசார்மீது அஸ்மின் ஆத்திரம் கொண்டிருந்தது தெளிவாகவே தெரிந்தது.
அவர்களை போலீசார் பல மணி நேரம் தடுத்து வைத்தது தேவைதானா என்றவர் வினவினார்.
“அது நியாயமா, கொடுமையா?”, என்றவர் வினவியதற்கு “கொடுமை” என்று கூட்டத்தினர் பதிலளித்தனர்.
“இது எல்லைமீறிய நடவடிக்கை. ஐஜிபி அவரின் சகோதரரைத் தடுத்து வைத்தாரா?”-இது அஸ்மின்.
“இல்லை”- இது கூட்டத்தினர்.
ஐயா அஸ்மின் இப்பொழுதுதான் தைரியமா உருப்படியா நச்சின்னு ஒரு கேள்வி கேட்டிருக்கிராறு. சந்தோசம்.
கலிட் அபுபாகார் , புகிட் அமான் தொகுதியில், அம்னோ தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளதாக, கேளிக்கை சித்திரத்தில் பார்த்தேன் !