வாக்காளர் எண்ணிக்கை குறையும் என இசி எதிர்பார்க்கிறது

elecபெர்மாத்தாங்  பாவ்  இடைத் தேர்தலில்  இன்று  வாக்களிப்பு  நாள். வாக்களிப்பதற்கு  24 வாக்களிப்பு  மையங்கள்  திறக்கப்பட்டு காலை  மணி  எட்டிலிருந்து  வாக்களிப்பு  நடைபெற்று  வருகிறது.

மாலை  மணி 5-க்கு  வாக்களிப்பு  மையங்கள்  மூடப்படும்.

அத்தொகுதியில்  உள்ள  71,890 வாக்காளர்களில்  80  விழுக்காட்டினர்தான்  வாக்களிக்க  வருவார்கள்  என  தேர்தல்  ஆணைய (இசி)த்  துணைத்  தலைவர்  முகம்மட்  ஹஷிம்  அப்துல்லா  கூறினார்.

“2013  பொதுத்  தேர்தலில் 88.50 விழுக்காட்டினர்  வாக்களிக்க  வந்தனர். அந்த  எண்ணிக்கை  80 விழுக்காடாகக்  குறையலாம்  என  இசி  எதிர்பார்க்கிறது”.

இடைத்  தேர்தல்  முடிவு  இரவு  9 மணி  வாக்கில்  தெரிய  வரலாம்  என்றாரவர்.

பெர்மாத்தாங்  பாவில்  நான்கு-முனைப்  போட்டி  நிலவுகிறது. பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசீசா  வான்  இஸ்மாயில், பிஎன்  வேட்பாளர்  சுஹாய்மி  சபுடின்,  பார்டி   ரக்யாட்  மலேசியாவின்  அஸ்மான்  ஷா,  சுயேச்சை  வேட்பாளர்  சாலே  இஷாக்  ஆகியோர்  அங்கு  போட்டியிடுகின்றனர்.