சிலுவை ஆர்ப்பாட்டம் மீதான விசாரணை முடிந்தது

crossதாமான்  மேடான்  தேவாலயத்தில்  நிகழ்ந்த  ஆர்ப்பாட்டம்  மீதான  விசாரணையை  போலீசார்  முடித்துக்  கொண்டிருக்கிறார்கள். விசாரணை  அறிக்கை  விரைவில்  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்திடம்(ஏஜிசி)  ஒப்படைக்கப்படும்.

இதனைத்  தெரிவித்த  சிலாங்கூர்  போலீஸ்  தலைவர்  அபு  சாமா  மாட்,  ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது  குற்றம்  சாட்டப்படுவது  பற்றி  ஏஜிசி-யே  முடிவெடுக்கும்  என்றார்.

“நாங்கள்  முடித்து  விட்டோம்(விசாரணையை). இன்று புக்கிட்  அமான்  சட்ட  விவகாரத்  துறைக்கு  அனுப்பி  விட்டோம். அவர்கள்  அதை  ஆராய்வார்கள்.

“எல்லாம்  சரியாக  இருந்தால் இரண்டொரு  நாள்களில் ஏஜி  அலுவலகத்துக்கு  அனுப்பி  வைப்போம்”, என்றவர்  சொன்னார்.