கெடாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்லாதவர்களுக்குச் சிறை

prayersகெடாவில்  வெள்ளிக்கிழமை  தொழுகையை  மூன்று  வாரங்களுக்குத்  தொடர்ந்து  தவிர்க்கும்  முஸ்லிம்கள்  2014ஆம்  ஆண்டு  ஷியாரியா  சட்டத்தின்படி  தண்டிக்கப்படுவர்.

வெள்ளிக்கிழமை  தொழுகையைத்  தவிர்ப்பவர்கள்  பற்றி  பொதுமக்கள்  கெடா  இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறையிடம்  புகார்  செய்யலாம்.

குற்றவாளிகளுக்கு மூன்று  மாதச்  சிறையும்  ரிம1,000வரை  அபராதமும்  விதிக்கப்படலாம்.

ஜூன் முதல்  நாளிலிருந்து  அச்சட்டம்  நடைமுறைக்கு  வருவதாக இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முஸ்லிம் ஆண்களில்  பலர்  சமயக்  கடமைகளைப்  புறக்கணிப்பதாக  முறையீடுகள்  வருவதாகவும்  இச்சட்டம்  அதைத்  தடுக்கும்  என்றும்  அவர்  சொன்னார்.