தியோ பெங் ஹோக்கின் இறப்புக்கு எம்ஏசிசி ரிம600,000 இழப்பீடு கொடுக்கும்

teoஆறாண்டுக்கால  இழுபறிப்  போராட்டத்துக்குப்  பின்னர்  அரசாங்கம்  காலஞ்சென்ற  தியோ பெங்  ஹொக்-கின்  குடும்பத்துக்கு  ரிம600,000 இழப்பீட்டுத்  தொகை  வழங்க  ஒப்புக்கொண்டிருக்கிறது.

இரு  தரப்பும் கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  இந்த  சமரசத்துக்கு  உடன்பட்டதாக கூலாய்  எம்பி  தியோ  நை சிங்  தெரிவித்தார்.

“முறையீட்டு  நீதிமன்றம்  தியோவின்  இறப்புக்கு  எம்ஏசிசி  தான்  பொறுப்பு  என்று  தீர்ப்பளித்தை  அடுத்து  அந்த  ஆணையம்  இந்த  இழப்பீட்டை  வழங்க  முன்வந்தது”, என்றாரவர்.

2009 ஜூலை 15-இல், சாட்சியமளிப்பதற்காக  மலேசிய ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)த்துக்குச்  சென்ற  தியோ, மறுநாள்  ஷா ஆலமில்  உள்ள எம் ஏம்ஏசிசி  தலைமையகத்தின் 14-வது  மாடியிலிருந்து  விழுந்து  இறந்து  கிடக்கக் காணப்பட்டார்.