பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைத்து திடீர் தேர்தலை நடத்தினால் வெற்றி பக்கத்தான் ரக்யாட்டுக்குத்தான் என்கிறார் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு.
பெர்மாத்தான் பாவ், ரொம்பின் இடைத் தேர்தல் முடிவுகள் அவருக்கு இந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் புத்ரா ஜெயா எங்கள் கைக்கு வந்து விடும். இந்த நம்பிக்கைக்குக் காரணம் பெர்மாத்தாங் பாவ். அங்கு பக்கத்தானின் பெரும்பான்மை 9,000-தான். வாக்காளர் எண்ணிக்கை குறைந்திருந்தது இதற்குக் காரணம்”. மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் முகம்மட் சாபு இவ்வாறு தெரிவித்தார்.
மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபுவுக்கு 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி), பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தாபோங் ஹாஜி 1எம்டிபி-இடம் நிலம் வாங்கியது முதலியவை பக்கத்தான் வெற்றிக்கு உதவும் என்றார்.
“கம்பத்து மக்களுக்கு 1எம்டிபி புரியாது. ஜிஎஸ்டி புரியும். தாபோங் ஹாஜி நல்லாவே புரியும்.
“தாபோங் ஹாஜி விவகாரம் மட்டும் பெர்மாத்தாங் பாவ் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்குமுன் வெளிவந்திருந்தால் பிஎன் தோல்வி இன்னும் மோசமாக இருந்திருக்கும்”, என்றார்.

























திடிர் தேர்தல் வந்தால் ……
ம .இ .கா….
பி . பி . பி …..
மக்கள் சக்தி ….
கிம்மா….
ஐ . பி . அவ்….
மற்றும் தேர்தல் காலங்களின் ….
முளைக்கும் ….
காலன் கட்சிக்களுக்கும்——-
சமுதாய அமைப்புக்களுக்கும் …..
நல்ல தீனிக் கிடைக்கும் …..
என்பது மட்டும் உண்மை !!!!!!!!!
நல்லா கனவு காண்கிறார் மாட் சாபு. திடீர் தேர்தல் வைப்பதற்கு முன்பாக, மகாதிமிர், நஜிப், முகிதீன் ஒன்றாக அமர்ந்து பேசி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் GST யை வாபஸ் பெற்றுகிறேன், என நஜிப் வாக்குறுதி அளிப்பார். பாரிசான் வெற்றி பெற்றால் இரண்டு வருடங்களில் நஜிப் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, என்னிடம் ஒப்படைத்து விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார், ஆகவே, எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக நினைத்து வாக்களியுங்கள், என்பார், முகிதீன். நஜிப் தன் தவறை உணர்ந்துவிட்டார், ஆகவே அவருக்கு வாய்ப்பு கொடுத்து, எனது கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் என்பார், மகாதிமிர். BRIM உயர்த்தப்படும். தமிழ்ப் பள்ளிகளுக்கு மான்யங்கள் பறக்கும். நஜிப் இரண்டு நாட்களுக்கு சீனா பயணம் மேற்கொண்டு, சீன வர்த்தக ஜாம்பவான்களுடன் பேச்சு நடத்துவார். ரோசம்மா ஒரு மலாய் கம்பத்தையும் விட்டு வைக்காமல் விஜயம் செய்வார். இன்னும் இருக்கு…………..{சொன்னால் மாட் சாபு மயக்கம் போட்டுடுவார், என்பதால், full stop ]
தேர்தல் வந்தால் உங்க பாஸ் கட்சியும் இரண்டாக உடையும் என்பது தெரியும் தானே…?
உங்கள் கட்சி ஹுடுட் சட்டத்தை அடக்கி வாசித்தால் , உங்கள் கனவு பலிக்கும். அம்னோவுடன் உங்கள் கட்சி மறைமுகமாக நட்பு கொள்வது அனைவரும் அறிந்த ஒன்று . அதை நிறுத்துங்கள் . பிறகு தேர்தல் பற்றி பேசலாம்.
சிங்கம் ! அடேயப்பா !! அருமையான தீர்க்கதரிசனம் சொன்னீர்கள் .
TAPAH BALAJI அவர்களே! இன்னும் இருக்கு என்றேனே. அதில் ஒரு சில இதோ. சென்ற பொதுத்தேர்தலில் வெளிநாட்டில் குடிபுகுந்துள்ள அனேக சீன வம்சாவழியினர் [குறைந்தது 80,000 பேர்] எப்படியாவது இம்முறை அரசாங்கத்தை மாற்றிட வேண்டும் என்கிற வெறியில் தங்கள் சொந்த செலவிலேயே வந்து பக்காத்தானுக்கு வாக்களித்தனர். வாக்களித்தும் வாய்ப்பு கிட்டவில்லை என்பதால், நம்பிக்கை இழந்துவிட்டனர். இனிமேல் வரவும் மாட்டார்கள். சீன வாக்காளர்கள் அதிகமுள்ள பல தொகுதிகள் எதிர்வரும் பொதுத்தேர்தல்களில் பக்காத்தான் இழக்கக் கூடும். அதற்கு தெலுக் இந்தான் தக்க சான்று. 7,000 வாக்கு வித்தியாசத்தில் ஒரு சீக்காளியை வைத்து வென்ற இத்தொகுதியை அழகான ஒரு பச்சிளம் பொம்மையை வைத்து படம் காட்டியும், மண்ணைக் கவ்வியதே, டி.எ.பி. மற்றுமொன்று. எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்பாக தொகுதிகளை சீரமைக்கும் வேலை உள்ளதே. கேட்கவா வேண்டும். BN னுக்கு ஆதரவாக வெட்டிக், குத்தி, பிரிக்கும் SPR . இதற்கு SPR வாலாட்டும் நாய்களுக்கு தக்க சன்மானங்கள் கொடுக்கப்படும்.