முன்னாள் தகவல் அமைச்சர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர், Parti Ikatan Bangsa Malaysia(ஈக்காத்தான்) என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். அது மக்கள்- ஆதரவுக் கட்சி என்றவர் கூறிக்கொண்டார்.
“ஈராண்டு போராட்டத்துக்குப் பின்னர் நீதிமன்ற ஆணையின் உதவியுடன் ஈக்காத்தான் ஒருவழியாகப் பதிவாகியுள்ளது”, என காடிர் ஸ்ரீகெம்பாங்கானில் அக்கட்சியின் தொடக்கவிழாவில் கூறினார். சுமார் 300 பேர் அதில் கலந்துகொண்டார்கள்.
தம் கட்சி பிஎன்னுக்கு ஆதரவாகவோ எதிரணிக்கு ஆதரவாகவோ செயல்படாது என்று கூறிய காடிர், தேச தந்தையர்களின் உணர்வுகளையும் நாட்டின் வருங்காலத் தலைமுறையினரின் அவாக்களையும் கருத்தில்கொண்டு அது செயல்படும் என்றார்.
இப்போதைக்கு 2018 பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் கட்சிக்கு இல்லை என்றாரவர்.
பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் அது பற்றி வினவியதற்கு தேர்தலில் போட்டியிடுவது பற்றி நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் என்றார்.


























பழைய மொந்தையில் புதிய கள்!. UMNO TERBARU
மழைக்காலங்களில் காளான் பூப்பது
போல் கட்சிகள் ஆரம்பிக்கும் தமிழக
கலாச்சாரம்.இங்கேயும் அந்தநோய்
பரவிடுச்சி நசிப்பு இந்தியர்களை பிரித்ததுபோல் மலாயிக்காரர்கலை
பிரிக்கஇதுபோல் கட்சிகள் ஆரம்ப
மாவது நல்லதே.மகாதிரின்ஆதரவா
ளர் காதிர் மற்றும் பெர்காசா இப்ராகிம் அலி தவளை.இரு கட்சிக்கு
ம் மகாதிர் ஆலோசகராக இருப்பார?
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜைத் இப்ராஹிம் புதுக் கட்சி திறந்தார். காணாமல் போய்விட்டது. இப்போது இந்த காதிர் புதுக் கட்சி ஆரம்பித்துள்ளார். அடுத்த போதுத்தேர்தல்வரை,செய்தி சேகரிக்கும் நிருபர்களுக்கு இலவசமாக சாப்பாட்டு கடைகளில் பசியாறலாம். நன்றி காதிர்.
இக்கட்சியில் ….
எத்தனை … இந்தியர்கள் ..???
PARTHI IKATAN DENGAN TALI ,,கட்சிக்கு இந்த பேரு வைங்கடா
எதனை இந்தியர்கள் என்று கேவ்ல்வி கேப்பதை விட்டு புட்டு போயி ,தானாகவே பதிந்துகொள்ளுங்கள் ,,கேள்வி கேப்பேங்க போயி பதிவு செய்ய மாட்டேங்க ,,