நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் வான் அசிசா வான் இஸ்மாயில் (பிகேஆர்- பெர்மாத்தாங் பாவ்), ஹசான் அரிப்பின் (பிஎன் -ரொம்பின்) ஆகிய இருவரும் எம்பிகளாகப் பதவி ஏற்றனர்.
அவர்களின் பதவியேற்புச் சடங்கு மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா முன்னிலையில் நடந்தது.
அசிசா எதிரணித் தலைவராகவும் இருப்பார் என பண்டிகார் அறிவித்தார்.
பக்கத்தான் கட்சிகள் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று தொடங்கி ஜூன் 18வரை நடக்கும். வியாழக்கிழமைக்குள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 11வது மலேசியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


























எதிரணித் தலைவராக வந்து விட்டால் மட்டும் போதாது. நாட்டில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தகுந்த தீர்வுகளை முன் வைக்க போதிய செயல் திறனும் பேச்சு திறமையும் தைரியமும் வேண்டும். நன்றே செய்க அதையும் இன்றே செய்க. MAIWP – கூட்டரசு நீதிமன்றத்தில் கொண்டு வர இருக்கும் இந்நாட்டு அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப் பட்ட வாதத்திற்கு தங்களின் தளர்ந்து போன கூட்டணியின் பதில் என்னவென்பதை வாய் மலர்ந்துச் சொல்லுங்கள். நாங்கள் கேட்க காத்துக் கொண்டிருக்கின்றோம். காலம் மாறுது, மக்கள் கூட்டணிக்கு எதிராக கருத்தும் மாறுது. அப்புறம் எங்களையும் மாற வச்சுடாதிங்க.
முன்பெல்லாம் டேவிட், லீ லாம் தை, பட்டு, லிம் கிட் சியாங், கர்பால் சிங், ஆகியோர் எதிர்தரப்பில் இருந்தபோது நாடாளுமன்றமே அதிரும் அளவிற்கு கலகலப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இப்போது ஓரிருவரைத் தவிர, பெரும்பாலான எதிர்தரப்பினர் எதற்குமே லாயக்கில்லாதவர்கள். யானைக்குட்டிகளும், பன்றிக்குட்டிகளும், நாடாளுமன்றத்தில், நிறைந்துள்ளதுபோல தென்படுகிறது. எதிர்கட்சியுள்ள பெருந்தலைவர்களுக்கு கூஜா தூக்கினால் போதும், சீட் கிடைத்துவிடுகிறது. நேர்மையானவர்களும், போராட்டவாதிகளும் ஒதுக்கப் படுகிறார்கள். இந்த அம்மா [வான் அசிசா] உள்ளே போய் என்னத்த கிழிக்கப் போகிறார்? வீட்டில் இருந்தாலாவது, பேரப்பிள்ளைகள் வாயிலே பூத்திங் வைத்து விளையாடிக் கொண்டிருக்கலாம்.
அவுங்களுக்கு எல்லாம் திறமையும் இருக்கு ,,ஏய் ,theni இத போயி bn காரனிடம் சொல்லவும் ,அவன்தான் இப்ப ஆட்சி ஆளுறான் ,pkr இன்னும் ஆட்சிக்கே வரவில்ல……………………
மாங்காய்கள் இன்னும் பழுக்கவில்லை .
ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்னவாகுமா…இத்தேதான் அப்பு..என்ன கொஞ்சம் சீனன் கை ஓங்கி நிற்கும்..நமக்கு பழையபடி சம்சுதான்…