அம்னோ தொகுதித் தலைவர்கள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைகூறும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்.
அவர்கள் பிரதமருக்குத் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிப்பதைவிட இதைச் செய்வதே முக்கியமாகும் என்கிறார் செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி.
தொகுதித் தலைவர்கள் சிலர் நஜிப்பை ஆதரிக்கிறார்களே தவிர மகாதிர் அல்லது எதிரணியினரின் குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதில்லை.
“நஜிப்புக்கு இப்படிப்பட்ட ஆதரவு தேவையில்லை.
“அவர்கள் மகாதிரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்க வேண்டும். அதுதான் அவருக்குத் தேவை”, என்று சைட் அலி கூறினார்.


























காப்பாற்றி, இன்னொரு MH 370 – ல் ஏற்றி போன இடம் தெரியாமல் அனுப்புங்கள்.
1997ல் இந்த மகாதிமிர், அன்வாரை சரமாரியாக எதிர்த்து சிறையிலும் தள்ளிய போது, அம்நோவிலுள்ள ஒரு பயலும் வாயை திறக்கக் காணோம். ஆனால், இப்பொழுது? 1MDBயில் கையாடியத்தில் உங்களுக்கெல்லாம் நிறையத்தான் கிடைத்தது போலும்.
அன்று நான் “புகிஸ்” கடைசிவரை போராடுவேன் என்று வீர வசனம் பேசிவிட்டு, இன்று தனது சகாக்கள் மூலமாக கேரள குட்டி”யிடமிருந்து “புகிஸ்”சை காப்பாற்றுங்கள் என்று அறிக்கையா ? நல்ல கூத்து !
“தொகுதித் தலைவர்கள் சிலர் நஜிப்பை ஆதரிக்கிறார்களே தவிர மகாதிர் அல்லது எதிரணியினரின் குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதில்லை” என்றால் ;
“தொகுதித் தலைவர்கள் பலர் நஜிப்பை ஆதரிக்கவில்லை, ஆனால் மகாதிர் அல்லது எதிரணியினரின் குற்றச்சாட்டுகளை எதிர்க்கிறார்கள்” என்று மறைமுகமாக கூறுகிறாரோ செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி.
அந்ததிருடனிடமிருந்து இந்த திருடனை காப்பாற்றுங்கள் !!!
நீங்கள் சம்பாதித்து விட்டீர்கள்! அதனால் தைரியமாகப் பேசுகிறீர்கள்! மற்றவர்கள் நிலைமை அப்படி இல்லாமல் இருக்கலாம்!
ஆமாம் ஆமாம் காப்பாற்றுங்கள் அப்பொழுதுதான் நிங்கலேல்லாம் இன்னும் அதிகம் சாப்பிட்டு ஏப்பம் விடலாம்.