மகாதிர்: பண்டிகர் என்னை ஒரு பொய்யராக்கி விட்டார்

 

Pandikarநாடாளுமன்ற மக்களவையின் தலைவர் பண்டிகர் அமின் முலியா முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி விட்டார்.

நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவதை பண்டிகர் மறுத்திருப்பது தா ம் ஒரு பொய்யை கூறியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மகாதிர் கூறினார்.

“அவர் ராஜினாமா செய்யவில்லை என்று கூறியதன் மூலம் அவர் என்னை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி விட்டார். என்னை வந்து பார்க்குமாறு நான் அவரை அழைக்கவில்லை.

“அவர் அவரது (ராஜினாமா) கடிதத்தை (பிரதமர்) நஜிப்பிடம் கொடுத்து விட்டதாக கூறினார். அவர் (பண்டிகர்) என்னிடம் கூறியதை அப்படியே மீண்டும் கூறினேன்.

“ஆனால், அவர் என்னை ஒரு பொய்யரைப் போல் ஆக்கிவிட்டார். இது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது”, என்று மகாதிர் புத்ராஜெயாவில் ஒரு புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் கூறினார்.

அவரை மீண்டும் சந்திப்பீரா என்று கேட்டதற்கு, “நான் அறியேன்”, என்று பதில் அளித்தார் மகாதிர்.