பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் கடன்களைக் குறைக்கும் திட்டம் பலனளிக்கும் என்று நம்புகிறார்.
“நடவடிக்கை எடுத்து 1எம்டிபி-இன் மொத்த கடனைக் குறைக்க முடியும். அதைத்தான் அரசாங்கம் செய்து வருகிறது.
“விரைவிலோ அல்லது சற்று காலம் தாழ்த்தியோ 1எம்டிபி மீட்பு நடவடிக்கைகளின் நோக்கத்தை அடைய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்”. இன்று காலை புத்ரா ஜெயாவில் நிதி அமைச்சு ஊழியர்களின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசியபோது நஜிப் இவ்வாறு கூறினார்.
தலைமைக் கணக்காய்வாளர் அலுவலம் அதன் அறிக்கையைப் பொதுக் கணக்குக்குழுவிடம் ஒப்படைத்த பின்னர் 1எம்டிபி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும் என்றும் நஜிப் தெரிவித்தார்.
1எம்டிபி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களை ஏமாற்றி ஏப்பம் விட்ட பணத்தை, மீண்டும் மக்கள் பணத்தைக் கொண்டே சரி செய்யும் மீட்பு திட்டம்?. இது அரசாங்கத்தின் பகல் கொள்ளையாக தெரியவில்லையா?. இது மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் அல்லவா?