சிறையில் அன்வாரின் 100வது நாள்

anwaபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறைசென்று  இன்றுடன்  நூறு  நாளாகிறது.  அவரின்  ஆதரவாளர்கள் சுங்கை  பூலோ  சிறைக்கூடத்துக்கு  வெளியில் ஒன்றுகூடி இந்த  100வது  நாளை  நினைவுகூரத்  திட்டமிட்டுள்ளனர்.

பெர்மாத்தாங்  பாவ்  எம்பியாக  இருந்த  அன்வார், அவரின்  உதவியாளரிடம்  குதப்புணர்ச்சியில்  ஈடுபட்ட  குற்றத்துக்காக  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டு  சுங்கை  பூலோ  அனுப்பப்பட்டார்.

பிப்ரவரி  10-இலிருந்து  அன்வார்  அங்கு  இருந்து  வருகிறார்.

அன்வாருக்கு  ஆதரவைக்  காண்பிக்க  இன்றிரவு  திரண்டு  வருமாறு   அவரின்  மகள்  நூருல்  நூஹா  அன்வார்   ஆதரவாளர்களைக்  கேட்டுக்கொண்டார்.