அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அணிக்கும் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அணிக்குமிடையில் நிகழ்ந்துவந்த பனிப் போர் இப்போது வெளிப்படையான போராக வெடித்திருக்கிறது என்று கூறும் டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங், அதை இனியும் மூடிமறைக்க முடியாது என்கிறார்.
அடிநிலை உறுப்பினர்கள் அணி பிரிந்து நின்று இரு தலைவர்களையும் சாடத் தொடங்கி விட்டார்கள். நாட்டின் மிகப் பெரிய கட்சிக்குள் அதிகாரப் போர் விரைவாக பரவி வருகிறது.
ஆகக் கடைசியாக, அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹப்ஷி, 1எம்டிபி இயக்குனர் வாரிய உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டுமென்ற முகைதினின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளை சிறப்பு விவகாரத் துறை (ஜாசா) தலைமை இயக்குனர் முகம்மட் புவாட் ஸர்காஷி, முகைதின் கல்வி அமைச்சுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனம் காட்டுகிறார் என்று சாடியுள்ளார்.
“நஜிப் ‘பச்சை விளக்கு காண்பிக்காமலா’ புவாட் முகைதினை இப்படி அப்பட்டமாகச் சாடுவார்?”, என்று லிம் ஓர் அறிக்கையில் வினவினார்.
“அம்னோவில் அரசியல் அதிகாரப் போர் ஆழமாக வேரோடும் வேளையில் 11வது மலேசியத் திட்டத்தைப் பற்றி யார் நினைக்கப் போகிறார்கள்?”, என்றாரவர்.
இதே வேளையில், பக்காத்தானில் உள்ள நயவஞ்சக குள்ளநரிகளின் நடவடிக்கைகள் மீதும் சற்று கவனம் கொள்ளுங்கள்.!!!!
இனவெறியர் மைதீன் வினாதாழ் கசியும் முன் தடுக்கத்தவறிய திறனற்றவர் மைடினின் பிரதமர்
போதை கனவாகவே களைந்துபோக
கடவாயி!
கட்டம் அமோகமாக வேலை செய்கிறது..
இந்த முயிடின் மீன் பிடிக்கிறவன் ,பிடித்த மீனெல்லாம் இவனே சுட்டு சாப்பிட்டு மற்றவர்களுக்கு இல்லாம செஞ்சிடுவான் ,கழிச்சல போயிருவான்
நீரும் நீரும் அடித்து கொண்டால் பிரியாது ,,,,,இதில் பாதிக்கப்பட போவது பாவம் மக்கள் தான்,,,,பல உண்மைகளை மக்கள் கவனத்தில் இருந்து திசை திருப்ப நடத்தப்படும் கபட நாடகம் ,,,,,
( அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அணிக்கும் துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அணிக்குமிடையில் நிகழ்ந்துவந்த பனிப் போர் )
உங்கள் செய்தியில் துணைப் பிரதமர் பெயர் தவறாக உள்ளது ஐயா !!!
ஆளும் கட்சியில் இப்படி நடப்பது சரி என்று தோன்றவில்லை. இனி அவன் அவன் என்னத்தைப் பிடிங்கித் தின்கலாம் என்று சிந்திப்பான்!
அன்வாரை உள்ளே தள்ளியதற்கு , இறைவன் தன் காயை நகர்த்த தொடங்கிவிட்டார் .