பாக்கத்தான் பங்காளிக் கட்சியான பாஸ் அக்கூட்டணியிலிருந்து எவ்விதத் தடையுமின்றி விலகிக் கொண்டு அம்னோவுடன் சேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைக்கலாமே என்று டிஎபி அக்கட்சிக்கு சவால் விட்டுள்ளது.
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இப்போதெல்லாம் அதிகப்படியாக ஓர் அம்னோ தலைவரைப் போல் நடந்து கொண்டு இன உணர்ச்சிகளைத் தூண்டி டிஎபியை தாக்கிக் கொண்டிருக்கிறார் என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
அவரை ஊன்றிக்கவனித்தால் அவர் ஓர் அம்னோ தலைவர் போல் இருக்கிறார். அவர் அம்னோ மற்றும் பாரிசானுடன் இணைந்து ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக முன்பு கூறியிருந்தார்.
“இப்போது அவர் எங்களைத் தாக்குகிறார். இது ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை அடைவதற்கான அவரது முயற்சியா?
“அவர் அம்னோவுடன் இருக்க விரும்பினால், அவருக்கு தடை ஏதும் இல்லை. ஆனால், முட்டாள்தனமாக பேசக் கூடாது, மற்றும் உண்மையற்றதும் தீய எண்ணமுடையதுமான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்”, என்று லிம் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அம்னோவுடன் எப்படி கூட்டுச் சேர்வது என்பது பற்றிய சிந்தனைக் கருத்துகள் ஹாடியிடம் இல்லாதிருப்பதால், அவரது நோக்கத்தை அடைவதற்கு டிஎபியை இனவாத அடிப்படையில் தாக்குவது அவரது தந்திரமாக இருக்கிறது என்று லிம் மேலும் கூறினார்.
“(நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்) என்று நாங்கள் எப்போதாவது கூறியிருக்கிறோமா?”, என்று லிம் வினவினார்.
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் ஹாடியின் நடத்தை பாஸ் கட்சித் தலைவருக்கு பாக்கத்தான் கூட்டணியில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.
“அவர் அம்னோ மற்றும் பாரிசானுடன் இருக்க விரும்பினார், அதைப் பகிரங்கமாகச் செய்ய வேண்டும். அதைத் துணிவுடன் செய்ய வேண்டும்.
“டிஎபிக்கு எதிரான இன உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது போன்ற நேர்மைக்கு முரணான இகழத்தக்க சூழ்ச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது”, என்று குவான் எங் இடித்துரைத்தார்.

























எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்வார் அவர்களுக்கு தார்மீக அடிப்படையில் கூட ஆதரவு தராத PAS , பிடிக்காத மனைவியுன் , அறவே பேசாமல் ஒரே வீட்டில் குடியிருபதர்க்கு சமம். அதற்க்கு விவாகரத்து எவ்வளவோ மேல்.
ஹடி அவங் செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமன்று. அதற்காக ஒட்டுமொத்த பாஸ் கட்சியை பக்காத்தானை விட்டு விலகச் சொல்வது, லிம் குவான் எங்கின் சுயநலத்தையே காட்டுகிறது. பினாங்கில், பாஸ் கட்சி துணையில்லாமல் டி.எ.பி.ஆட்சியை பிடிப்பதில் எவ்வித தடையும் இல்லை. ஆனால், ஏனைய மாநிலங்களில் டி.எ.பி.க்கு பாஸ் கட்சியின் ஆதரவு இல்லையெனில் டி.எ.பி.கரை சேர முடியாது. லிம் குவான் எங் கின் தாக்குதல் ஹடி அவாங்கை குறி வைத்தாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒட்டு மொத்த பாஸ் கட்சியை எதிர்த்து பக்காத்தானை அழித்துவிடலாகாது.
இந்நாட்டு மக்கள் மாற்றத்தை கொண்டுவர பெரிய முட்டுக் கட்டை அம்னோவின் ரொட்டித் துண்டுக்கு ஆசைப்படும் இந்த ஹடி. அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு பிரச்சனைகளுக்கு வழி காட்டியாக மட்டுமே உள்ள சரியாஹ் சட்டத்தை கிரிமினல் சட்ட நிலைக்கு கொண்டு செல்ல பார்க்கிறான். குர்ஆனில் 7 அல்லது 8 இடங்களில் மட்டுமே சொல்லப்பட்ட இந்த சட்டத்தை அமலாக்க முயல்கின்றான். இஸ்லாத்தின் நம்பிக்கையின் படி கடவுள் மட்டுமே எந்த பாரபட்சமும் இன்றி இது போன்ற முழுமையான சட்டத்தை இயற்றமுடியும்.
ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்ட சாதாரண ஜந்துவான இவன் தன சுயலாபத்திரிக்காக இந்த செயலில் ஈடுபடுகிறான்.
அப்படி பகதானை விட்டு பாஸ் கட்சி வெளிவேறினான் இன்னும் 100 வருடங்கள் போனாலும் BN னை ஒன்றும் செய்ய முடியாது .
கிழக்கு கடற்கரை மாநிலங்களில் அதாவது கெலந்தான் , தேரேங்கனுர் , கெடா, பெர்லிஸ் போன்ற மாநிங்களின் பாஸ் கட்சிக்குதான் செல்வாக்கு . ஹுடுத் முஸ்லிம்கள் சம்மந்த பட்ட ஒரு உணர்ச்சி வசமான பிரச்சினை இதில் பிறர் மூக்கை நுழைப்பது அவளவு நாட்டுக்கும் ஓட்ருமையாக வாழும் நம் மலேசியா திரு நாட்டிற்க்கும் நல்லதல்ல …………….. தயவு செய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்
மன ஒற்றுமை இல்லையேல் விவாகரத்து மேல்.
நன்னா இருக்கே உங்க நியாயம்….ஓ(ட்)டு வேணும்’னா கூடி கூத்தடிபிங்க…..பிரச்சினை வந்தால்….விரட்டி அடிப்பிங்களா ….தம்பி சாம்பிராணி பக்காத்தான் …..பொது மக்கள் உங்களுக்கு பகட காய் போல தெரிகிறதா…???….உங்கள் கூட்டணி பிரச்சினை தீர்க்க முடியாத நீங்கள்…..எப்படி…?? எங்களின் நிலைமை ??…எது எப்படியோ…மறுபடியும் ஒரு சமரசம் பேசி ஒரு நல்ல முடிவு எடுங்கப்பா….
இவர்களை ஒட்டி ஒட்டி வைப்பதை விட வெட்டி விடுவதே மேல்!