பகாங்கில் கடந்த சனிக்கிழமை நடந்த அம்னோ உறுப்பினர்களுடனான பிரத்தியோக கூட்டத்தில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரையின் வீடியோ பதிவை கசிய விட்ட அம்னோ தலைவருக்கு மன்னிப்பே கிடையாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறினார்.
அந்த அம்னோ தலைவரின் பெயரை வெளியிட மறுத்து விட்ட ஸாகிட் அவர் ஒரு தொகுதியின் துணைத் தலைவர் என்று மட்டும் கூறினார்.
“நான் அவருடன் தொடர்பு கொண்டேன். அவர் மன்னிப்பு கோரினார். ‘உனக்கு மன்னிப்பே கிடையாது’ என்று நான் பதில் அளித்தேன்.
“இழப்பு ஏற்பட்டு விட்டது. அவரது நடத்தைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்”, என்று ஸாகிட் காஜாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.


























அமைச்சர் ஜஹிட் அவர்களே! வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருமையா. அம்னோவில் நடந்த, நடந்துகொண்டிருக்கும், நடக்கப்போகும், அநியாயங்கள், ஊழல்கள், சுரண்டல்கள் யாவும் வெளியே வரும், வந்துகொண்டிருக்கும் காலம் இது. நீங்கள் என்ன கத்தினாலும், எப்படி கத்தினாலும், யாரையும் அடக்க முடியாது. மகாதிமிர் வாயிலாக ஏழரை சனி அம்னோ தலையில் ஏறி உட்கார்ந்து விட்டது.
உண்மையை சொன்னால் கசக்குதோ ?
அம்னோவின் சுயரூபம் தெரிந்து விட்டது என்பதலா?.
நம் நாட்டில் நடக்கும் உண்மைகளை வெளியிட்டால் மன்னிப்பு கிடையாது நடவடிக்கை நிச்சயம் உண்டு .
மக்கள் பணத்தை விழுங்கிய உனக்கும் உன் கூட்டத்திற்கு மட்டும் மன்னிப்பு கிடைக்கும் என்று நினைகிறீர்களா மாண்புமிகு அமைச்சர் அவர்களே….
ஜனநாயக நாட்டில் ரகசியம்மா ? எதுக்கு ? மக்களை ஏமாற்றி ஏப்பம் விடவா ? உண்மையை சொன்னால் மன்னிப்பு இல்லையா ? உன்னைபோன்ற அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வைத்த மக்களுக்குத்தான் மன்னிப்பே இல்லை !
“உன்னைபோன்ற அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வைத்த மக்களுக்குத்தான் மன்னிப்பே இல்லை!. நன்றாகச் சொன்னீர் தமிழர் நந்தா. உண்மையை மறக்க இவர்கள் நடத்தும் நாடகம் அவர்கள் பின்பற்றும் மத போதனைகளுக்கு ஏற்புடையதாகுமா?. ‘Ya Tuhan’.
நீங்கள் எல்லாம் அந்த கூட்டத்தில் இருந்தீர்கள் உண்மைதானே .இதற்க்கு என்ன அர்த்தம்.
இந்த ஷாகித் ஹமிடி எது பேசினாலும் அந்த பேச்சில் ஒரு முட்டாள் தனம் தெரியும் ! இவனெல்லாம் ஆட்சி செய்தால் நாடு எங்கே உருப்படுவது ?
ஒரு முட்டாளின் பேச்சில் முட்டாள் தனம் தெரிவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அப்படி என்ன ரகசியத்தை சொல்லிவிட்டார்என்று இந்த துள்ளு துள்ளுகிறார் மட பன்னாடை !!
lozenika ! அப்படி என்ன ரகசியத்தை சொல்லிவிட்டார்என்று இந்த துள்ளு துள்ளுகிறார் மட பன்னாடை !! ஒரு வேலை பெலாச்சான் செய்வது எப்படின்னு கூட்டத்தில் சொல்லி இருப்பாரோ ?