பிஏசி சந்திப்பைத் தவிர்க்கிறார் 1எம்டிபி தலைவர் அருள்

arul1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி)த் தலைவரும்  செயல்முறை  இயக்குனருமான  அருள் கந்தசாமி நாளை  பொதுக் கணக்குக்குழு(பிஏசி)க்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  மாட்டார்.

அருளும் முன்னாள்  தலைமை  செயல்  அதிகாரி(சிஇஓ)  ஷாரோல் ஹல்மியும்   சந்திப்பைத்  தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டிருப்பதாக  சில  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தன.

பிஏசி  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  அது பற்றி  இன்றைய  செய்தியாளர்  கூட்டத்தில் மேலும்  விவரிப்பார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.