பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் தலைமைத்துவம் பற்றி என்னதான் குறை சொன்னாலும் 11வது மலேசிய திட்டத்தைச் செயல்படுத்தும் அரசாங்கத்தின் கவனம் அதனால் மாறப்போவதில்லை என்கிறார்.
இன்று அரசு அதிகாரிகளிடையே பேசிய நஜிப், அவர்கள் நாட்டுக்கு மேலும் முதலீடுகளைக் கொண்டுவரவும் மலேசியாவில் ஆக்கத்தைப் பெருக்கி அதை உயர்- வருமானம் பெறும் நாடாக மாற்றவும் முன்னின்று பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“நாட்டை மேம்படுத்துவதிலிருந்து எதுவும் நம் கவனத்தைத் திருப்பிவிட இடமளிக்கக் கூடாது.
“நமக்குத் தேவை வளர்ச்சியை ஆதரிக்கும் அரசாங்கம். நடுத்தர அல்லது உயர் வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுவரும் கொள்கைகளைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். வளர்ச்சி இல்லையேல் பல பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்”, என்றாரவர்.

























ஆமாம், முறையான கணக்குவழக்கில்லா பெருங்கடனிலிருந்து நாடு திணறி வெளி வர, நீர் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் பொதிமாடுபோல் தலையசைத்து உடன் வரவேண்டும். என்ன அப்படித்தானே தலைவரே??? சொல்வது சரிதானே??? 260 பில்லியன் ஆயிற்றே! பின் வாங்காதீர்!!!!!
முடியும் முடியும் சாமி வேலு இந்தியர்களுக்கு ஒரே நாளில் திட்டான் பூட்டு விட்டாரே
நடத்துங்கள் உங்கள் நாடகத்தை. ஏமாளிகள் மக்கள் இருக்கும் வரை உங்களுக்கு கொண்டாட்டம்.
போதுமடா சாமீ உங்கள் நாடு முன்னெற்றம்.
போதுமட சாமீ உங்கள் நாடு முன்னெற்ற திட்டம். அத்தனையும் அல்வா திட்டம்.
11 திட்டம் இந்தியர்களுக்கு பட்டை நாமம்தான்
இதுதான் காலா காலாமாக நடக்கின்றதே– இன்னும் என்னத்தை சொல்ல?