டிஏபி-யுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்வதில் அவசரம் கூடாது என சிலாங்கூர் பேராளர் சாபி ங்கா பாஸ் முக்தாமாரில் எச்சரித்தார்.
உலாமா பிரிவு கொண்டுவந்த தீர்மானத்தை நடப்பு முக்தாமாரில் விவாதிப்பது மட்டும் போதாது என்றாரவர்.
“நல்ல தீர்மானம்தான். ஆனால், நன்றாக யோசித்துப் பாஅருங்கள், ஒருவரை ‘Aku ceraikan kau’ என வெட்டி விடுவது எளிது.
“ஆனால், குழந்தைகள், நம் சொத்து, பாஸும் இஸ்லாமும் முன்னோக்கிச் செல்வதைக் காணத் துடிக்கும் மலாய்க்காரர்க்ளின் அவா இவையெல்லாம் என்ன ஆவது”. தலைவரின் கொள்கையுரை மீதான வாதத்தின்போது ங்கா இவ்வாறு கூறினார்.
ஒரு சிறப்பு முக்தாமாரில் அதை விவாதிக்க வேண்டும் என்றவர் முன்மொழிந்தார்.
“இதை ஒரு சிறப்பு முக்தாமாருக்குக் கொண்டு வாருங்கள். இரண்டு பகல்கள், இரண்டு இரவுகள் விவாதிப்போம். இதை விவாதிக்க 30 நிமிடங்கள் போதா”, என்றார்.
டிஏபி-யுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ள உலாமா மன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம்மீது ங்கா கருத்துரைத்தார்.

























மதியாதார் சொல் கேட்டு நய வன்சக வலையில் விழுந்த உங்கள் தலைமைத்துவம் இனிமேல் சீனர் இந்தியர்கள் உங்கள் கட்சியை நிராகரிப்பார் . அப்போது தெரியும் உங்கள் கட்சி நிலைமை.
…………ஜென்மங்களையும் தூக்கி குப்பையில் போடுங்கள்– எல்லாம் நன்றி கெட்ட ஜென்மங்கள்.
முழு நிலவு தேய்ந்து பிறை ஆகிவிடும்,,,,,வரும் பொது தேர்தலுக்கு பின் ,,,,,
கற்றரிந்தவர்களோடு இருந்தால்தானே அறிவு மேலும் சுடரும் கிணற்று தவளைகளுக்கு எங்கே புரியும்? வரும் காலங்கள்தான் உணர்த்தும் !
HADI I எவரடி i TELL INDIAN CHINESE IN MALAYSIA DONT VOTE PAS ANYMORE அடேய் ஹாடி ….இனி pas செலங்கோரில் ஒரு இடமும் ஜெயிக்காமல் இருக்க ஆவன நாங்கள் உன்னை போன்ற கேடுகெட்டவனுக்கு வோட்டு போட்டதை நினைத்து வருந்துகிறோம்
கிணற்று தவளைகளுக்கு எங்கே புரியும்? வரும் காலங்கள்தான் உணர்த்தும் !
பாஸ் கட்சியும் டி.எ.பி.யும் ஆர அமர உட்கார்ந்து தீர்கமாக கலந்தாலோசிக்க வேண்டும். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். மக்கள் கூட்டணி இரண்டு பட்டால், நாட்டு மக்களை பாரிசான் நரகாசுரன் நம்மை தின்று தீர்த்து விடுவான், ஜாக்கிரதை.
பக்காத்தான் விரைவில் சரியான/உறுதியான முடிவு எடுக்கவில்லையென்றால், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். பக்காத்தானின் ஒருமித்த கொள்கைக்கு பாஸ் எதிராக செயல்படில், துண்டித்து விடுவதே மேல்….இல்லையெனில் கூட இருந்தே கண்ணைக் கீறிவிடும்…”கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம்”.
பாசைக் கொண்டு இந்நாட்டை ஆள்வது என்பது நம்ம தலையில் நாமே எண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக் கொள்வதற்குச் சமம். அதனால் மக்கள் கூட்டணி பாஸ் கட்சியை மறந்து கிழக்கு மலேசிய கட்சிகளுடன் இணைந்து நடுவண் ஆட்சியை அமைப்பதுப் பற்றி ஆலோசனை செய்து ஒரு நல்ல முடிவை எடுக்க எடுக்க வேண்டும். இதுவே இந்நாடு அரசியல் சாசனத்துக்கு உரிய வகையில் அனைத்து இன, மத மக்களை உள்ளடக்கிய நடுவண் ஆட்சி அமைக்க உதவும். இதற்கு தே.மு. பங்காளித்துவத்தை உடைக்க மக்கள் கூட்டணி மாற்று வழிகளைக் காண வேண்டும். இல்லையேல் மக்கள் கூட்டணிக்கு நடுவண் ஆட்சி கானல் நீரே.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இரங்குவதற்கு சமம்.பாஸ் கட்சியுடன்
இணைந்து வெற்றி பெற்றாலும் அந்த
ஆட்சி என்னத்தான் ஆறப்போட்டு பேசினாலும் ஆட்சி ஒன்று.இரண்டு
மாதங்கள் கூட நிலைக்காது.மேலும்
பக்காத்தானுக்கு நீங்காத களங்கம்
ஏற்ப்படும்.pkr.DAP.இணைந்து மாற்று
வழிவகைகளை ஆராய வேண்டும்.