கோலாலம்பூரில் 1எம்டிபி விவகாரம் குறித்து விவாதிக்க விருந்த பொதுக் கருத்தரங்கை தடுத்து நிறுத்தியதற்காக போலீசாரின் நடவடிக்கைகளை படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கடுமையாக தாக்கிப் பேசினார்.
இது போலீஸ் படைத் தலைவரின் அதிகார வரம்பு மீறலுக்கான மிக அண்மைய சம்பவமாகும். நாட்டின் பாதுக்காப்புக்கு எதிரான உண்மையான அச்சுறுத்தல்களை, எல்லைப் பாதுகாப்பில் ஊழல் போலீசார் மற்றும் தடுப்புக் காவல் மரணங்களில் கட்டுப்பாடற்ற போலீசார் போன்றவை உட்பட, விட்டு விட்டு தமது கற்பனையில் தேசிய பாதுகாப்புக்கான மிரட்டலைக் காண்கின்றார் என்று பிகேஆரின் அரசியல் பிரிவின் உறுப்பினரான சுரேந்திரன் கூறினார்.
மக்களின் ஏளனத்திற்கு போலீஸ் படையை தள்ளி விடாதீர் என்று அவர் ஐஜிபி காலிட் அபு பாக்கரை கேட்டுக் கொண்டார்.
ஓர் அரசு சார்பற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி பற்றிய கருத்தரங்கில் தலையிடுவது போலீசாரின் வேலையல்ல என்றாரவர்.

























சாபாவில் நஜிப்பின் கூட்டத்திற்கு 40,000 பேர் கூடினார்களாம். சரவாக்கில் நஜிப்பிற்கு 20,000 பேர் கூடினார்களாம். எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், PWTC யில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்திற்கு 2,000 பேர் கூடியிருந்தார்களாம். 40.000 பெரிதா? 2,000 பெரிதா? 2,000 பேர் தான் அதிகம். அங்கேதான் கலவரம் ஏற்படும். எங்கள் கணக்கு உமக்கு புரியாது சுரேந்திரா!
நான் பல முறை கூறியதுபோல நன்கு படித்த, சட்டம் தெரிந்த , இனம் பார்க்காத, லஞ்சம் பெறாத நேர்மையான காவல் படை தலைவர் இருந்தால் நாடு சுபம் காணும் . நன்றி .
எல்லா நிலையிலும் அப்படிப்பட்டவர் தான் தேவை. அப்போதுதான் நாடு உருப்படும் சிங்கப்பூரைப்போல்
நம்ம igp புகிட் அமான் அம்னோ தொகுதி தலைவர் என்று நம்ம சுனார் கார்டூன் தீட்டி விட்டார் !
ஆமாயா உங்களுக்கு இதை வைத்து கேசும் நடத்தலாம்., அன்வாருக்கு லாயர் ஆகி எம்.பி ஆகிவிட்டிர்கள் . பி.கே.ஆர் உதவித் தலைவராக இருந்த போது இந்தியர்களுக்காக பி.கே. ஆரில் ஒரு புல்லை புடுங்கி இருப்பீர்களா