பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், பாஸ் வெளியேறுவதால் மாநில அரசில் காலியாகும் இடங்களை நிரப்புவதில் பிரச்னை இருக்காது என்கிறார்.
“தகுதிபெற்ற மலாய்க்காரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு பதவிகள் நிரப்பப்படும்”, என்றாரவர்.
பாஸ் கட்சி முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபு பூலாவ் பினாங் நீர் விநியோகத் துறையிலிருந்தும் பினாங்கு ஹலால் மையத்திலிருந்தும் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பதவி விலகல் கடிதத்த்தை இன்னும் கொடுக்கவில்லை என்று லிம் கூறினார்.
“மற்றவர்களும் அவ்ரைப்போல் பதவி விலகுகிறார்களா, பார்ப்போம். டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிய பாஸ் முக்தாமார் அதன் உறுப்பினர்களை பினாங்கு அரசுப் பதவிகளிலிருந்து விலகுமாறு பணிக்காததுதான் ஆச்சரியம்”, என்றாரவர்.
இதனிடையே, பினாங்கு அரசுப் பதவிகளில் உள்ள பாஸ் உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள் என்றும் அவர்கள் பாஸ் தலைமையின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும் உலாமா பிரிவுத் தகவல் தலைவர் முகம்மட் கைருடின் அமாம் ரசாலி கூறினார்.
61வது முக்தாமாரில் கொண்டுவரப்பட்டது டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளும் தீர்மானம் அல்லவென்றும் உறவைத் துண்டிப்பதா வேண்டாமா என்ற முடிவை
பாஸ் தலைமையிடம் விட்டுவிடும் தீர்மானம்தான் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

























நஸ்ருட்டின் சொன்ன மாதிரி, முட்டிக் கையும் முழங்கால் வேகமும் எப்படி ஆடுகிறது என்று பார்ப்போம். அரசியல் சாணக்கியத்தை டி எ பி இடமிருந்து பாஸ் கற்றுக்கொள்ள சரியான தருணம்!!!
இப்படியும் பொய் பித்தலாட்டம் பேசும் கட்சி மதவாதக் கட்சியா? இந்த கட்சி பொய்யர்கள் கட்சி.
இனி பக்கதானுக்கு சாவு மணிதான் இனி எத்தனை தேர்தல் வந்தாலும் BN ஒன்னும் பண்ண முடியாது …………….. இதை தான் பெரும்பாலான மலேசியர்கள் எதிர்பார்த்தனர் ………… வரும் பொது தேர்தலில் UMNO உம் PAS கூட்டனிவைதே ஆகா வேணும் அதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது ……. DAP யாழ் நாம் இந்தியர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை நன்மைகள் அனைத்தும் சினர்களுக்கு தான்………………. பினாகில் BN கீழ் இருந்த பொழுது நாம் இந்தியர்கள் பல நன்மைகள் அடைந்தனர் அனால் இன்று வியாபாரம் செய்ய குட முடிய வில்லை அந்த அளவிட்க்கு நம் இந்தியர்களை பினாகில் அடிமைகள் போல் வைத்து இருக்கிறார்கள் இந்த DAP காரர்கள்…………… தலைநகர் கோலாலும்பூர் பற்றி சொல்லவே தேவை இல்லை நாம் இந்தியர்கள் யாருமே வியாபாரம் செய்ய கூடாது என்று கங்கணம் கட்டி கொன்று இருக்கின்றனர் இந்த DAP செர்ந்த சீனர்கள்
thamilan சொல்வது உண்மையா? தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும்.
டி.எ.பி. ஒரு அருமையான கட்சி. 2008ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாகாக, மக்களுக்காக உண்மையிலேயே பாடுபட்டது. 2008க்குப் பின் பினாங்கு மாநிலம் கைக்கு வந்த பின், BN காரர்களை விட, பெரும் முதலைகளாகிவிட்டனர், மேல்மட்ட தலைவர்கள். அதிலும் கர்பால் சிங் மறைந்த பிறகு, கட்சியில், தடி எடுத்தவனெல்லாம் தண்டலாகிவிட்டான். லிம் கிட் சியாங்கை ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். அவரது மகன் லிம் குவான் இருக்காரே, அப்பப்பா, இடி அமின் பிச்சை வாங்கவேண்டும். ம.சி.ச, கெராக்கான், அம்னோவிலிருந்து டி.எ.பி.க்கு ஓடி வருபவனுக்கெல்லாம் சீட். உண்மையாக உழைத்து கட்சியை கட்டிக் காத்தவர்களுக்கெல்லாம் கொட்டாங்கச்சி.எந்தத் தலைவனாவது இந்த லிம் குவான் எங்குக்கு கூஜா தோக்கவில்லை என்றால், அவனுக்கு ஆப்பு. thamilan சொன்னது நுனிப்புல் மட்டுமே. இன்னும் பல உண்மைகளை போட்டுடைத்ததால், லிம் குவான் எங்கின் பொழப்பு நாறிவிடும். டி.எ.பி.மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். வந்துவிடும். நம்புகிறேன்.
இந்த தமிழனுக்கு மண்டையில் ஒன்னும் இல்லை
பாஸ் மாங்காய்கள் பி எம் ஐ நம்பி மோசம் போகிறது காலம் கடந்து மக்கள் செல்வாக்கையும் இழந்து வருந்துவார்கள் !
தமிழன் பினங்கிலும் செலாங்கூரிலும் வாழ வழியில்லாமல் கை எ ந்திக்கொண்டிருக்கிறார்