1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் இயக்குனர் வாரியம் ஜூலை மாத வாக்கில் பதவி விலகுமாம். அடையாளம் கூறப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி எட்ஜ் நிதியியல் நாளேடு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இயக்குனர் வாரியத்தைப் பதவிதுறக்கச் சொல்வது யார் அல்லது எந்த அமைப்பு என்பதை அது தெரிவிக்கவில்லை.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தலைவராகக் கொண்ட 1எம்டிபி அலோசனை வாரியமும்கூட பதவி விலகும் என அடையாளம் கூறப்படாத ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி தி எட்ஜ் கூறிற்று.
இச்செய்தி மீது 1எம்டிபி-இன் பேச்சாளர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.
– Reuters

























பதவி விலகுவது பெரிதல்ல. காணாமல்போன 190 கோடி பணத்துக்கு யார் பதில் சொல்வது??? 42 பில்லியன் கடன் மக்கள் தலையிலா???
பதவி விலகிவிட்டால் அடித்த கொள்ளையில் இருந்து தப்பி விடலாம் ,,,கேஸ் closed,,,,இது உம்னோகாரர்களின் சிறந்த யுக்தி ,,,,,
கோவிந்தா! கோவிந்தா!.
பதவி விலகலாம், தவறில்லை! அதற்கு முன் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அத்தோடு இனிமேல் எந்தவொரு பதவியையும் அவர்கள் வகிக்கக்கூடாது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.