பக்கத்தான் ரக்யாட்டின் நடப்புகளால் கவலையடைந்துள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அண்மையில் பாஸ் முக்தாமாரில் டிஏபியுடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்ளக் கொண்டுவரப்ப்பட்ட தீர்மானத்தை பாஸ் மறுசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இன்று பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் வழி விடுத்த அறிக்கையில் அன்வார், பாஸ், டிஏபி, பிகேஆர் ஆகியவற்றுக்கிடையிலான அரசியல் ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மிகவும் கவலையுற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
“விவாதத்துக்கு விடப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அத்தீர்மானத்தை பாஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இப்போதைக்கு அதை அமல்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்”, சுங்கை பூலோ சிறையில் உள்ள அன்வார் அந்த அறிக்கையில் கூறினார்.


























தலையறுத்துப் போட்ட மக்கள் கூட்டணி தலைகால் தெரியாமல் நடுத்தெருவில் தலைகீழாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்கு சுரேந்திரன் ஒரு பேச்சாளர்?!.
“இப்போதைக்கு அதை அமல்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்”, என்ன அறிவு கெட்டத்தனமான அறிக்கை இது. இப்போதைக்கு அமுல்படுத்த வேண்டாம் என்றால் தேர்தலில் மக்களிடம் மாங்காய் கூட்டணி என்று பொய் சொல்லி வெற்றிப் பெற்ற பிறகு தக்க நேரம் வரும், அப்பொழுது அமுல்படுத்திக் கொள்ளுங்கள் என்பதா இந்த அறிக்கையின் அர்த்தம்?.
பாஸ் கட்சியை நம்பியது போதும் வேற கட்சியை சேர்த்து கொள்ளுங்கள் பாஸ் வேண்டாம்.
அவக போனால் போகட்டும் . ஊர் இந்தியர் சார்ந்த கட்சியைச் சேர்த்துக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாய் வரும்
இன்னும் என்ன வேண்டும்? முறிவு என்று வெட்ட வெளிச்சமாக சொல்லிவிட்டதே உங்கள் உறவு துரோகி. இன்னும் அழைத்தால் அவமானம்தான் பகதானுக்கு.போதும் அவர்கள் அம்நோவுடன் சேர்ந்து நடத்திய கூட்டு நாடகம். பகுத்தறிவு இல்லாத ஜென்மகள் உங்கள் கூடனியில் தேவையில்லை.
ஆகாயத்தில் போகும் சனியை ஏன் ஏணிவைத்து இறக்குகிறிர்கள்?