பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம்முடைய தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ’பெரிய சீர்குலைவு’க்குக் காரணமே முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் என்று கூறினார்.
“துன் குறிப்பிடும் சீர்குலைவு அவரது கைங்கரியதால் ஏற்பட்டது. அவரால் சாடல்களால் எதிரணியினரின் பொய்களையும் அவதூறுகளையும் அப்படியே எடுத்துரைப்பதால் விளைந்தது.
“அக்குற்றச்சாட்டுகளை இணையத்தளம் மேலும் ஊதிப் பெரிதாக்கி விட்டது”, என நஜிப் தம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

























முதல் ரவுண்டு : புகிஸ் 0 கேரளா 1
அட ச்சீ, உம்முடைய துணை பிரத மந்திரியே 1MDB -ப் பற்றி கேள்வி எழுப்புகின்றார் என்றால் ஏன் ஊரிலிலுள்ள மக்களை எல்லாம் வம்புக்கு இழுக்கின்றாய். அதற்கடுத்து அமைச்சரவையில் உள்ள சில மந்திரிகளுக்கு 1MDB -ன் கதை மந்திரித்து விட்ட கோழியின் கதை மாதிரி இருக்கு என்று வெளியே சொல்லித்திரிகின்றார்கள் என்றால் அப்புறம் ஏன் மாமக்தீரை குறை சொல்லுகின்றாய்?. தமிழ் நாட்டு முதலமைச்சர் மாதம் Rs1/= சம்பளமாகப் பெற்று கோடானு கோடிக்கு அதிபதியான வரலாற்றுக் கதை இதற்கு முன்னாடியே பதிவாகி இருக்கும் பொழுது, 1MDB – ட்டில் எனது பங்களிப்பிற்கு எந்த ஒரு சன்மானமும் பெறவில்லை என்பது இன்றைய நாளில் முதல் தரமான காமெடி. இவர் பிரதமர் பதவிக்கு தகுதி உடையவரா?. நானே அந்த இடத்தில் உட்கார்ந்தால் இவரை விட இன்னும் நன்றாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவரு ரொம்ப சுத்தமானவரு ………
ஒன்று மட்டும் உண்மை. இன்றைய அரசியல் சீர்குலைவுக்கு டாக்டர் மகாதிரே முக்கிய காரணம். அன்று அவர் செய்த தகிடுதத்தங்கள் இன்று அனைவரையும் பாதிக்கிறது என்பது தான் உண்மை. ஆனாலும் இன்றைய பிரதமர் அவர் ஆடிய ஆட்டத்தை தொடர்ந்தது தான் இவர் செய்த மிகப்பெரிய தவறு!
முன்னால்,பின்னால் யாவரும் ஊழால் பெருச்சாளிகள்தான். மாட்டாத வரை மதிபிக்குரிய மாண்பு, மாட்டிக்கொண்டால் மா ………….. …பு !
இந்த ரெண்டு பெருச்சாளிகலும் கூட்டதின் தலைவர்கள் . முன்னது மதவெறி , பின்னது பணவெறி. ரெண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
நாட்டின் சீர்குலைவுக்கே உம்நோகாரர்கள் என்று சொல் ,,,,