1எம்டிபி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
“பணச்சலவை நடந்திருப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துவதைத் தலைமைக் கணக்காய்வாளரும் பொதுக் கணக்குக் குழுவும்தான் கண்டுபிடித்துக் கூற வேண்டும்.
“ஆனால், 1எம்டிபி பணச்சலவை செய்ததா என்பது எனக்குத் தெரியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாராவது பணச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் நீதிமுன் நிறுத்தப்படுவார்கள்”, என நஜிப் தம் வலைப்பதிவில் கூறினார்.
மே 28-இல், முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் 1எம்டிபி பணச்சலவை நடவடிக்கையில் ஈடுபட்டது உண்டா என்று கேள்வி எழுப்பியிருந்ததற்கு நஜிப் இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருந்தார்.

























நீ எதைத்தான் அறிந்தாய்? நீ அறிந்து இருந்தால் இந் நாடு இந் நிலையில் இருக்காது. ஆனால் எப்படி உன் வங்கி கணக்கை மேலே ஏத்த முடியுமோ அதை அறிந்து வைத்திருக்கிறாய். காகாதிமிருக்கும் அதிசயமாக தெரிந்து இருக்கின்றது!
கண்ணிருந்தும் குருடர், காதிருந்தும் செவிடர், வாயிருந்தும் ஊமை. அப்புறம் இவருக்கு எதற்கு பிரதமர் பதவி?. ரோஸ் அக்கா தலைமயிரைப் பிரித்து பேனு பார்க்கச் சொல்லு. அதையாவது சரியாகச் செய்கின்றாரா என்று பார்ப்போம்.
1எம்டிபியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் நஜிப். எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. அனைத்துக்கும் நீர் தான் பொறுப்பு. அதுவே லாபகாரமான நிறுவனமாக இருந்தால் “அதற்கு நான் தான் பொறுப்பு” என்று நீங்கள் தான் நெஞ்சை உயர்த்திப் பேசுவீர்!
“பணச்சலவை நடவடிக்கை” என்றாலே 99.99% பணம் “போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல்” மூலமாக கிடைக்கும் வருமானமாகும். அப்படியானால், 1MDB நிறுவனம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிறுவனமா ? அந்த நிறுவனத்தின் ஆலோசனை வாரியத்தின் தலைவர் இந்நாட்டின் பிரதமரா ? நல்லாயிருக்கே !!!