முதல் தடவையாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை 1எம்டிபி கலந்துரையாடலில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அறைக்குள் நடப்பதாக இருந்த கலந்துரையாடல் பொது விவாதமாக உருமாறியதுதான் காரணமாம்.
‘ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த அந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் தாம் பொதுவில் விவாதமிடுவது முறையாகாது என நஜிப் கூறினார்.
“மூடிய அறைக்குள் நடப்பதாக இருந்த நிகழ்வு பொது விவாதமாக உருமாறியது. இதனால் மகாதிரும் நானும் பொதுவில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும்.
“பிரதமர் என்ற முறையில் நான் என் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் பிரதமருடன் பொதுவில் வாதமிடுவது முறையாகாது”, என நஜிப் அவரது வலைப்பதிவில் கூறினார்.

























என்ன கொடுமெய் சார் இது !!!! காது குதி ரொம்ப நாள் அஹ்சி .
….ட்டை இல்லாதவன் மேடை சரியில்லை என்று சொன்னானாம்!!!!
அறைக்குள் நடந்தால் துன் காலில் விழுந்தாலும் மக்களுக்கு தெரியாமல் போய்விடும் என்ற என்னமோ???? என்னதான் நடந்தாலும் 42 பில்லியன் கடன் கணக்கு வழக்கு மக்களுக்கு தெரிந்தாகவேண்டும். மக்கள் வரிப்பணம். ரோஸ்மா சிறு வயதிலிருந்து சேர்த்த பணமல்ல இது!!!!
உள்ளத்துக்கடியில் மறைந்து
உள்ளிருக்கும் வார்த்தைகளை
உதட்டு நுனியின் ஓரத்தில்
உருமாற்றம் செய்கிறேன்
இந்த உண்மையை
இருவரும் உணர்ந்திருந்தாலும்
வெளிப்படையாய்
வெளிக் கொணர்வதில்லை
என்னை மதிக்காதவன்
என்றைக்காவது, ஒரு
காரியத்திற்காக என்னிடம்
கலகலப்பாகப் பேசும்பொழுது
நானும் ஒரு நடிகன்தான்!
நன்றி: tamilnanbagal.com
அறைக்குள் நடத்திருந்தால் என் குடுமி உன் கையில் என்றால் உன் குடுமி என் கையில் என்று பேரம் பேசிஎல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் !
ஏண்டாப்பா பிரதமரே, இந்த ‘Amanah Raya Berhad’ பணத்தையும் கொண்டு 1MDB -க்கு RM2/= பில்லியன் கடன் கொடுக்க வேண்டிய காரணம் என்னப்பா?. ARB -யில் இருந்து இப்படிப் பட்ட பொறம்போக்கு நிறுவனத்திற்கு அவ்வளவு பணம் கொடுத்த கதையை எனது வாழ்நாளில் இப்பதான் கேள்வி படுகின்றேன். விட்டால் இந்த நாட்டு கஜானாவை சுத்தமா வளித்து விட்டுதான் போவீர்களா?. இப்படிபட்ட ஒரு வருபோகி அரசாங்கத்திற்கும் இந்த நாட்டு மலாய்க்காரர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கின்றார்கள் என்றால் அவர்கள் எப்படிப் பட்ட மூடர்களாக இருப்பார்கள். சிவபெருமானே உமது திருவிளையாட்டால் இந்த நாட்டை எப்படியாவது இந்த கயவர்களின் கையில் இருந்து காப்பாற்று.
உண்மையிலேயே சொல்கின்றேன், வயதான தமிழர் ஒருவர் கொஞ்ச காலத்திற்கு முன்பு பிரதமர் படத்தை வைத்துக் கொண்டு செருப்பால் அடிப்பது போன்று ஒரு ‘போஸ்’ கொடுத்தாரே, அது அப்படியே நடக்கட்டும்.
theni -அது தவறு நாம் அந்த மட ராணுவ ஈன ஜென்மங்களுக்கு சம மாக ஏதும் செய்ய கூடாது. நமக்கு அது கேவலம். அவனுக்கு வாக்கு போடாதீர்கள். அவனின் கட்சியை தூக்குங்கள்.
அறைக்குள் நடக்க வேண்டியது பொதுவாக மாறியது என்பதுக்காக பாதுகாப்பு கரணம் சொல்லி போலிசை வைத்து நாடகம் ஆடுவாயா??
“ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை” ஆனால் “மூடிய அறைக்குள்”தான் நடக்க வேண்டும் என்று சிறு பிள்ளைதனமாய் அறிக்கை விட்டு,
“கேரள மகாதீரும்” “புகிஸ் நஜிப்பும்” கணவன் மனைவியோ என மக்கள் நக்கலும் நையாண்டியுமாக கேலி பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டார் “புகிஸ் நஜிப்”
உண்மை தான். மகா-திருடனுடன் இன்னொரு மகா-திருடன் பொதுவில் வாதமிடுவது நன்றாய் இராது தான்!