பாஸ் கட்சியினர் அவர்களின் தலைவர்கள் அம்னோவுடன் கைகோக்க விரும்புகிறார்கள் என்று குற்றஞ்சாட்டக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் புதிய உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மட்.
பாஸ் தலைவர்கள் ஜன்ம பகைவர்களான அம்னோவுடன் அமர்ந்து தேநீர் அருந்துவதை வைத்து உறுப்பினர்கள் அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது என்றாரவர்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அம்னோவுடன் ஒத்துழைப்பதை விரும்புகிறார் என்பது கட்சியில் அவருக்குள்ள ஆதரவைக் கண்டு பொறாமை கொண்டுள்ளவர்களால் கூறப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என இட்ரிஸ் குறிப்பிட்டார்.
“நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். முன்பே அம்னோ தலைவர்கள் கைகோக்க விருப்பி ஹாடிக்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு ஹாடி பாஸ் அம்னோவில் சேராது, பக்கத்தான் ரக்யாட்டில்தான் இருக்கும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்”, என்றாரவர்.

























இவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள் ஒன்றுமே புரியல இவர்கள் சரியான குழப்ப வாதிகள்.
போர்த்திக்கிட்டு படுத்தா என்ன?, படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன?. வார்த்தைதான் வேறு வண்டவாளம் ஒன்றுதான். இரண்டும் ஒன்றுதான் கபோதிகளே.
போர்த்திக்கிட்டு படுத்தா என்ன?, படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன?. வார்த்தைதான் வேறு வண்டவாளம் ஒன்றுதான். இரண்டும் ஒன்றுதான் கபோதிகளே.
ஒரே மேடையில் தேனீர் அருந்தி குழப்பத்தை உருவாகுவிர்கள். மக்கள் எமாளியகவேண்டும். இதுதான் உங்கள் திட்டம். போதுமையா உங்கள் பித்தலாட்டம். உங்கள் எண்ணம் போல் அம்னோவுடன் கும்மி அடியுங்கள். மக்களை திசை திருப்பாதிர். நீங்கள் பலிகடா என்பதை போக போக உணர்வீர்கள்.
நம்பிக்கை நாயகனுடன் கைக்கோர்க்கும் உங்களை நாங்கள் நம்புகிறோம். அரசியல் அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது பாஸ் கட்சிக்கு!!
ஆளாளுக்கு ஒரு மாதிரியான அறிக்கைகள் விடுகிறார்கள் ஆற்றில் ஒரு கால் , சேற்றில் ஒரு கால் இந்த குழப்பவாதிகள் அவர்களையும் குழப்பிக்கொண்டு மக்களையும் குழப்புகிறார்கள் இவர்களை நம்பினவனும் கெட்டான்,நம்ப போறவனும் கெட்டான் !
நீங்க அம்நோவுடன் சேர்ந்து தேநீர் குடிங்க , கும்மாளம் போடுங்க , கூத்தாடுங்க்க அதன் விளைவு வரும் தேர்தலில் தெரிந்துவிடும்…?