முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் பிரதமராவதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் எந்தத் தவறும் நிகழவில்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
ஆனால், அதற்குமுன் 1எம்டிபி நிதி விவகாரங்களில் முழு புலனாய்வு நடப்பதற்கு வழி வகுத்து நஜிப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“எந்தத் தவறும் கண்டுபிடிக்கப்படாமல் எல்லாப் பணமும் திரும்பக் கிடைக்கும் பட்சத்தில் நஜிப் மீண்டும் பிரதமராகி பிஎன்னை வழி நடத்தலாம்”. மகாதிர் அவரது வலைப்பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அவர் பதவியில் உள்ளவரை 1எம்டிபி பற்றிய உண்மை வெளிவராது.
“பிரதமர் அங்கிருக்கும்வரை முறையான விசாரணை நடத்த முடியாது.
“இப்போதே பார்க்கிறோம், 1எம்டிபி மீதும் ஜோ லோ மீதும் செய்யப்பட்ட போலீஸ் புகார்கள் விசாரிக்கப்படவில்லை என்பதுடன் யார் அப்புகாரைச் செய்தாரோ அவர் நொடித்துப் பொனவராக அறிவிக்கப்பட்டு அவரது வீடு பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டிருக்கிறது. அவரே பணச் சலவை நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறார்”.
1எம்டிபி-க்கு எதிராக போலீஸ் புகார் செய்த அவரது விசுவாசியும் பதவி நீக்கப்பட்ட பத்து கவான் அம்னோ உதவித் தலைவருமான கைருடின் அபு ஹாசனுக்கு ஏற்பட்ட நிலையைத்தான் மகாதிர் குறிப்பிடுகிறார்.

























வாழ்க! வாழ்க! பிரதமர் வாழ்க! காக்காவை சரியாக மிதிக்க பிறந்த தலைவனே நீர் வாழ்க!
இதில்லிருந்து தெரியவில்லையா? அவர் கழுவுகிற மீனிலிருந்து நழுவுகிற மீன் என்று, வாயிலிருந்து உண்மையும் வராது பதவியை விட்டும் போகமாட்டார் நீர் தவளைபோல் கத்திக்கொண்டு இருக்கவேண்டியதுதான் .
கேரள மாமாவே நீர் என்ன சொன்னாலும் “செவிடன் காதில் ஊதிய சங்குபோல”; உதாரணம் “ஜோலோ” இவர்களை “SPIN MASTER” என்று கூறியும் சொரணை இல்லாத ஈன ஜென்மங்கள்.
எவனாவது இளிச்சவாய் இருந்தால் அவனிடம் போய் துன் மகாதீர் இந்த கதையை சொல்லிப்பார்க்கட்டும். நஜிப் என்ன ஒன்றும் தெரியாதவரா, பதவி போனால் போனது தான். இந்தியர்களை ஓரம் கட்டிய மகாதீருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். நஜிப் அவர்களின் தந்தையும் நாட்டின் இரண்டாவது பிரதமருமான துன் அப்துல் ரசாக்கும் இரண்டாவது துனைப்பிரதமருமான துன் டாக்டர் இஸ்மாயிலும், அதன்பின் வந்த நம் தேசத்தை 23 ஆண்டுகள் ஆட்சி செய்த புலிகேசி மகாதீரும், பிறகு அவசரமாக வந்து போன அஹ்மாட் படாவியும், இப்ப பதவியில் இருக்கும் நஜிப் அவர்களும் இன அடிப்படையில்தான் நல்லாட்சி வழங்குபவர்கள் என்பதை உலகமே அறியும் (இதில் மலேசிய தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களும் மூன்றாவது பிரதமர் துன் ஹுசேன் ஒன் அவர்களும் இனரீதியை விட மலேசியர் என்ற அடிப்படையில் ஆடசி வழங்கினர்). இந்தியர்களுடனும் சீனர்களுடனும் ஒற்றுமையுடன் இருந்த மலாய் சமூகத்தை பூமிபுத்ரா என்ற அடைமொழியுடன் பிரித்து ஆளாக்கிய புகழுக்குத்தான் இப்ப அம்னோ தலைவர்கள் தெருவில் கட்டி புரளுகின்றனர் என்பதை கேட்கும் போது மனசெல்லாம் மத்தாப்புத்தான் போங்க!
இந்தியர்களையும் சீனர்களையும் ஒதுக்கிய மகா ககாதிரே உனக்கு உன் இனமே வெக்கிது ஆப்பு வாங்கிக்கோ.அனைவரையும் அணைத்து மலேசியர்கள் என்று ஆட்சி செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா உனக்கு ? கேடு நினைப்பவன் கெடுவான். உனக்கு இந்த பழமொழி பொருந்தும்.
ramala,கருத்துக்கள் சூப்பர்! அடேய் காக்கா! பதவி விலகினால் என்ன ஆகும் என்று PM க்கு தெரியாது பாரு! இந்த ஜென்மத்தில் உன் சொட்டை மகன் நாட்டை மொட்டை அடிக்க கனவில் கூட விட மாட்டோம்! Plus உன் legacy யா? யாருகிட்டே கதை சொல்றே? எங்கள் சம உரிமையை ஒவ்வொன்றாக பறித்த உனக்கு மன்னிப்பே கிடையாது!!!
அடேய் காக்கா! பதவி விலகினால் என்ன ஆகும் என்று PM க்கு தெரியாது பாரு! இந்த ஜென்மத்தில் உன் சொட்டை மகன் நாட்டை மொட்டை அடிக்க கனவில் கூட விட மாட்டோம்! Plus உன் legacy யா? யாருகிட்டே கதை சொல்றே? எங்கள் சம உரிமையை ஒவ்வொன்றாக பறித்த உனக்கு மன்னிப்பே கிடையாது!!!