பக்கத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சியான டிஏபியுடன் உறவுகளை முறித்துக்கொள்ளும் விவகாரத்தில் பாஸ் தலைவர்கள் பேசும் பேச்சு குழப்பத்தைத்தான் தருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த பாஸ் முக்தாமாரில் பேசியவர்களில் சிலர் பாஸ் இன்னும் பக்கத்தானில்தான் இருக்கிறது என்றும் வேறு சிலர் அது டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக முன்னாள் பாஸ் மத்திய செயல் குழு உறுப்பினர் டாக்டர் ஹட்டா ரம்லி தெரிவித்தார்.
எனவே, இவ்விவகாரத்தில் ஒரு தெளிவான பதிலைக் கொடுக்க வேண்டியது பாஸின் புதிய தலைமையின் பொறுப்பாகும்.
“புதிய தலைமை முறையான பதிலை முன்வைக்க வேண்டும்”, என்று ஹட்டா இன்று டிஏபி தலைமையகத்தில் பேசியபோது குறிப்பிட்டார்.

























மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா! வார்த்தையில் நடுக்கமா?.
பி கே ஆர் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். பாசின் பதவி வெறி பிடித்த தலைவர்களுக்கு பாடம் கற்ப்பிக்க வேண்டும். இஸ்லாமிய கட்சிதான் தலைமை வகிக்க வேண்டும் என்பது இந்த உலமாக்களின் எண்ணம். தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்ளக் கூடாது.
பாஸ் கட்சி ஒரு லாலான் என்பது எல்லாருக்கும் தெரியும் அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது
நிலைல்லா இவர்கள் மீண்டும் அந்தர் பல்டி அடித்தாலும் அடிக்கலாம் .ஆச்சிரியப்படுவதர்க்கில்லை?