1எம்டிபி விசாரனையைத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவத்தில் பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வுக்கு எந்தப் பிரச்னையுமில்லை.
“அதில் எனக்குப் பிரச்னையே இல்லை”, என பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“ஆனால், நடப்பு நாடாளுமன்ற நடைமுறையில் அதற்கு இடமில்லை.அதனால் கேள்வி என்னவென்றால் நேரடி ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது, அமைச்சரவையிடமா, அவைத் தலைவரிடமா?”, என நூர் ஜஸ்லான் வினவினார்.
கடந்த வாரம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை” கலந்துரையாடலில் கலந்துகொள்ளாததால் 1எம்டிபி மீதான பிஏசி விசாரணையையாவது நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று உலகளாவிய மிதவாதிகள் இயக்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

























முடியும் ஆனால் முடியாது!!!! ஒளிப்பரப்ப முடியும் ஆனால், ஒளிப்பரப்ப அனுமதி இல்லை.!!!! நல்ல ஜோக்கு போங்க!!!!
மலேசியாவின் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” நேரடி ஒளிபரப்போ ?
“1MDB” எந்தன் காதலி !!! மாறுமோ கொள்ளை அடித்த போதிலும்” என்று கதாநாயகன் பாடும் காட்சியையும், “மகனுக்கு பிரதமர் பதவி; இல்லையேல் மரண அடி” என்று கதாநாயகனை பார்த்து குணசித்திர வில்லன் கர்ஜிக்கும் காட்சியையும், தயவு செய்து தடை செய்து விடாதீர்கள்.