பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அம்னோ தொகுதித் தலைவர்களுக்கு 1எம்டிபி பற்றி விளக்கமளிப்பார் என்று சண்டே ஸ்டாரில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
அச்செய்திமீது கருத்துரைத்த டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், சர்ச்சைக்குரிய 1எம்டிபி பற்றி அம்னோ தொகுதிகளின் பிரதிநிதிகளிடம் விளக்கமளிக்கத் தயாராக உள்ள பிரதமர் நாடாளுமன்றத்திடம் விளக்கமளிக்கத் தயங்குவது ஏன் என்று வினவியுள்ளார்.
1எம்டிபி ஓர் அரசாங்க நிறுவனம். 1எம்டிபி-இன் எல்லா முடிவுகளையும் ஏற்று அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும் இறுதி அதிகாரம் நஜிப்பிடம் உள்ளது.
பிரதமர் என்ற முறையிலும் நிதி அமைச்சர் என்ற முறையிலும் 1எம்டிபி-இன் செயல்களுக்கு நஜிப்பே பொறுப்பேற்க வேண்டும் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவருமான லிம் கூறினார்.
என்னை ஆதரிப்பதென்றால்..இந்தா…பிடி….கோ/ வச்…க்கோ !!!! IMDB யை குறைகூறும் மகாதீரையும் எதிர்கட்சியினரையும் ஒன்று சேர்ந்து புறக்கணிப்போம்….அம்னோவுக்கும் பாக்கெட்டு கனக்கும், எனக்கோ குத்தல் குடைச்சல் குறையும். இல்லையெனில் எல்லாம் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் தூக்கவே முடியவில்லை. பிரதமர் என்ற முறையில் மக்களுக்கு வேண்டியதெல்லாம் நாடாளுமன்றத்தில் தெளிவான உமது பதில்!!!!!
மேற்கண்ட எமது கருத்துனை பிரசுரிக்கவேண்டாம்…
காரணம் கேட்காமல் சொல்வதைக் கேட்டுக் கொள்ளும் கூட்டம் நல்லவர்களா அல்லது சொல்வதர்க்கெல்லாம் காரணம் கேட்கும் நாடாளுமன்றத்தில் இருக்கும் கூட்டம் நல்லவர்களா?.
என்னை ஆதரிப்பதென்றால், IMDB யை குறைகூறும் மகாதீரையும் எதிர்கட்சியினரையும் ஒன்று சேர்ந்து புறக்கணிப்போம்….அம்னோவுக்கும் ஆட்சி நிலைக்கும். பாக்கெட்டும் கனக்கும், எனக்கோ குத்தல் குடைச்சல் குறையும். இல்லையெனில் எல்லாம் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் தூக்கவே முடியவில்லை. பிரதமர் என்ற முறையில் மக்களுக்கு வேண்டியதெல்லாம் நாடாளுமன்றத்தில் தெளிவான உமது பதில்!!!!!
இதெல்லாம் 57 ஆண்டு நடை முறை ஒன்றுமே செய்ய முடியாது. இது இந்த ஈன ஜென்மங்களின் ரத்தத்தில் ஊறியவை.
பல கோடிகளை LEFT-டுலெ கொடுத்து, RIGHT-டுலெ வாங்கி, CENTRE-லெ விட்டு சுத்தினேன் “1MDB” ஊத்திகிச்சு, நம்ம நாட்டுலே இதெல்லாம் சகஜம், ஆகவே இதை பெரிது படுத்தாமல் அனைத்து அம்னோ தொகுதி தலைவர்களும் கண்ணை மூடி கொண்டு என்னை ஆதரிக்கனும்.என்று பிரதமர் ‘நயமாக’ கூறுவார்.
அப்புறம் என்ன, அனைத்து அம்னோ தொகுதி தலைவர்களும் “நஜிபுக்கு ஜே” “அம்னோவுக்கு ஜே” ; மகாதீருக்கு “பெப்பே” என்று கரவொளி/கோஷம் என்று தூள் கிளப்புவார்கள்.