1எம்டிபி பற்றி அம்னோவுக்கு விளக்கும் பிரதமர் நாடாளுமன்றத்திடம் விளக்கமளிக்காதது ஏன்?

briefபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  அம்னோ  தொகுதித்  தலைவர்களுக்கு 1எம்டிபி  பற்றி  விளக்கமளிப்பார்  என்று  சண்டே  ஸ்டாரில்  ஒரு  செய்தி வெளிவந்திருக்கிறது.

அச்செய்திமீது  கருத்துரைத்த டிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட்  சியாங்,  சர்ச்சைக்குரிய  1எம்டிபி  பற்றி  அம்னோ  தொகுதிகளின்  பிரதிநிதிகளிடம்   விளக்கமளிக்கத்  தயாராக  உள்ள  பிரதமர்  நாடாளுமன்றத்திடம்  விளக்கமளிக்கத்  தயங்குவது  ஏன்  என்று  வினவியுள்ளார்.

1எம்டிபி  ஓர்  அரசாங்க  நிறுவனம். 1எம்டிபி-இன்  எல்லா  முடிவுகளையும்  ஏற்று  அவற்றுக்கு  ஒப்புதல்  அளிக்கும்  இறுதி அதிகாரம் நஜிப்பிடம்  உள்ளது.

பிரதமர்  என்ற  முறையிலும்  நிதி  அமைச்சர்  என்ற  முறையிலும்  1எம்டிபி-இன்  செயல்களுக்கு நஜிப்பே  பொறுப்பேற்க  வேண்டும்  என்று டிஏபி  நாடாளுமன்றத்  தலைவருமான  லிம்  கூறினார்.