முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், காலஞ்சென்ற ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இஸ்கண்டார் சுல்தான் இஸ்மாயிலைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத் தலைவராக இருந்த நீதிபதி சேலே அப்பாஸை, 1988-இல் பதவியிலிருந்து வெளியேற்றினாராம்.
காலஞ்சென்ற ஜோகூர் சுல்தானின் மகன் துங்கு அப்துல் மஜிட் இட்ரிஸ் இஸ்கண்டார் முகநூலில் இவ்வாறு கூறினார்.
அப்போது பேரரசராக இருந்த சுல்தான் இஸ்கண்டா தலைமை நிதிபதிமீது கோபம் கொண்டிருந்ததாக மகாதிர் கடந்த சனிக்கிழமை கூறியிருந்ததற்கு எதிர்வினை ஆற்றிய துங்கு இவ்வாறு கூறினார்.
சாலே வெளியேற்றப்பட்டதற்கு மகாதிரே காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டாலும் சுல்தான் இஸ்கண்டாருக்குத்தான் சாலேமீது கோபம் என்றும் ஆனால், சாலேயை வெளியேற்றிய பழியைத் தாம் ஏற்றுக்கொண்டதாகவும் மகாதிர் கூறியிருந்தார்.
“மகாதிர் சாலேயை வெளியேற்ற என் தந்தையைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை. சாலே நல்ல மனிதர். என் தந்தைக்கும் அது தெரியும்.
“அவர் (சுல்தான்) துன் சாலேயுடன் ஏற்கனவே சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
“மகாதிர் அவர்களே, தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியாதவர்கள்மீது தயவு செய்து பழி போடாதீர்கள்”, என்று துங்கு மஜிட் கூறினார்.

























இன்னும் கிண்டினால் ரொம்பவும் நாறும்! மகாதீரின் சரித்திரம், தரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது!
இதை சுல்தான் அவர் ஆட்சி காலத்திலேயே சொல்லியிருக்க வேண்டும்!!! அப்போது அமைதி காத்தது ஏனோ???
காக்காமகாதிர் இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கு .
போக போக வெளிவரும் இந்த மஹா காக்காவின் போல்லாதனமும்,,,,போட்ட வேசமும் ,,,அடித்த கொள்ளையும் ,,,அடித்துக்கொண்டிரும் கொள்ளையும் ,,,,மஹா திருடன் இவன் ,,,,, இன்று உத்தமன் வேடம் போடா முயல்கிறான் ,,,,
அப்பொழுது சொல்லி இருக்கலாம் ,,,, ஆனால் ,,,,,,காக்காதான் சிண்டை பித்துக்கொண்டிருந்தானே ,,,,,, கோல்ப் திடலில் அடித்ததற்கு ,,,,,,,,,
அன்று உன்திருவிலாயடல் இன்று உன் சகா தொடர்கிறார். இரண்டுமே ஒன்றுதான்.
பலரும் பலமுறை இக்கிழவனைப் பற்றி உண்மையை சொன்னால் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை, இது ஆரம்பமே. இன்னும் இவன் செய்த பயங்கர அரசியல் திருகுதாளங்கள் வெளிவரும், வரவேண்டும். ஒற்றுமையும் சுபிச்சமுமாக இருக்க வேண்டிய நாட்டை தன சொந்த நலனுக்காக மதம், இனம் என்று பிரித்து மேய்ந்தவன்.அம்னோவின் மாநாடுகளில் இவனது உரையை வாய்ப்பிருந்தால் கேட்டு பாருங்கள். அதுபோல MIC மாநாட்டில் இவனுடைய உரைகளை கேட்டு பாருங்கள் உண்மை விளங்கும்.