பிஎன் ‘பரப்புரை’ பிரிவுகளை ஒழித்துக்கட்டுவீர்: டிஏபி வலியுறுத்து

btnடிஏபி எம்பிகள்  பலர், தேசிய  குடிமையியல்  பிரிவையும் (பிடிஎன்) சிறப்பு  விவகாரப்  பிரிவையும்(ஜாசா)  ஒழித்துக்கட்ட  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

“அரசியல் நோக்கத்திற்காகவே  அவை  உருவாக்கப்பட்டன  என்பது  தெளிவு, ஜாசாவுக்கு  ஆண்டுக்கு  ரிம21.7 மில்லியன்  ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. அவ்விரண்டு  பரப்புரை  பிரிவுகளுக்காகவும் ஆண்டுக்கு  ரிம80 மில்லியன்  செலவிடப்படுகிறது.

“இனவாதம்  மிக்க மலிவான  பரப்புரைகள்  செய்வதற்காகவும் பிஎன்னைக்  குறைகூறுவோருக்கு  எதிராக  அவதூறு  கூறவுமே இவ்வளவு  செலவிடப்படுகிறது.

“அதனால்தான்  இவ்விரு  பிரிவுகளையும்  அகற்ற  வேண்டும்  என  ஒருமித்த  குரலில்  கேட்டுக்கொள்கிறோம்”, என புக்கிட்  பெண்டேரா  எம்பி  ஜைரில்  கிர்  ஜோகாரி  கூறினார்.