எதிரணித் தலைவர்களில் பலர் பக்கத்தான் ரக்யாட் ஓர் அரசியல் சக்தியாக தொடர்ந்து நிலைபெற்றிருப்பதைக் காணவே விரும்புகின்றனர்.
பக்கத்தான் கதை முடிந்ததாக லிம் குவான் எங் அறிவித்த சில நிமிடங்களிலேயே பாஸ், பிகேஆர் தலைவர்கள் பக்கத்தான் என்று சொல்லவே பெருமையாக இருக்கிறது என்றும் தாங்கள் இன்னமும் அக்கூட்டணியில்தான் இருப்பதாகவும் கூறிக்கொண்டனர்.
பாஸ் இளைஞர் தலைவர் நிக் அப்டு நிக் அசீஸ், பக்கத்தான் ரக்யாட் கூட்டணி இன்னமும் இருக்கிறது என்றார். அதன் கதை முடிந்தது என்று கூறியது டிஏபி-இன் சொந்த முடிவு.
பாஸ் முக்தாமாரில் கொண்டுவரப்பட்ட டிஏபி-யுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளக் கோரும் தீர்மானத்தை பாஸ் ஷுரா மன்றம் இன்னும் விவாதிக்கவில்லை என்றவர் சொன்னார்.
“(பக்கத்தான்) கதை முடியவில்லை. இப்போது இரண்டு கட்சிகள் இருக்கின்றன. கட்சிகளின் கூட்டணிதான் பக்காத்தான். இரண்டு கட்சிகள் அதில் இருந்தால்கூட அது கூட்டணிதான், இனி, எல்லாம் பாஸ்ஸையும் பிகேஆரையும் பொறுத்தது”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிக் அப்டு கூறினார்.
இதனிடையே, ஷா ஆலம் எம்பி காலிட் சமட், டிஏபி முடிவு பாஸுக்கும் மற்ற பக்கத்தான் தலைவர்களுக்கும் ஒரு பாடமாகும் என்றார். அவர்கள் தங்களின் நண்பர்களைப் பற்றிப் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
“அந்தத் தீர்மானத்தின் விளைவாகத்தான் டிஏபி அப்படிக் கூறியுள்ளது. இது அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். பேச்சிலும் செயலிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பக்கத்தான் குறுகிய காலத்தில் உருவாகி வலிமைபெற்ற ஒன்றல்ல.
“அது பற்பல ஆண்டுகள் ஒன்றாகப் போராடியதன் பயன். ஆனால், சொல்லிலும் செயலிலும் கட்டுப்பாடு இல்லையென்றால் இதுதான் நேரும்”, என காலிட் கூறினார்.

























போதுமடா உங்கள் இரட்டை வேடம் நாதேறி பாஸ். பகதானை விட்டு வெளியேறுங்கள்.உங்கள் பொய் பித்தளாட்ட்டம் இனிமேல் மக்களிடம் எடுபடாது.அம்னோவுடன் சேர்ந்து கூட்டு வைத்து நாட்டை மொட்டை அடிக்காமல் இருந்தால் அதுவே நீங்கள் செய்யும் பெரும் புண்ணியம்.
பாஸ் தலைவர்கள் இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் என நினைத்து பார்க்கவில்லை. டி எ பியை தள்ளி வைப்பார்களாம் ஆனால் பகடானில் இருப்பார்களாம், அம்நோவுடன் ஒற்றுமை அரசாங்கமாம் ? என்னய்யா கதை. யாரை மடையனாக்கப் பார்க்கிறீர்கள்?
இவங்கள் என்றைக்குமே ஆபத்தானவர்கள், ஹடியை தலைவனாக அங்கிகரிக்கும் வரி.
காலித் சமாட் போன்ற நியாயமான சிந்தனையாளர்கள் பாஸ் கட்சியில் இருப்பது ஆறுதலான ஒன்று.
பக்காதான் சாகாது ,,,,, அது உயுருடந்தான் இருக்கும் மக்களின் ஆதரவு இருக்கும் வரை ,,,,,,,அதை விட்டு பாஸ் வெளியேறினால் அதற்கு தானே சாவுமணி அடித்து கொள்ளும் ,,,பபெரியான்களுக்கு உருவாக்கிய சட்டத்தை புதுப்பிக்க முயால்பவர்கள் முட்டாள்கள் என்பதை விட மூடத்தனமானவர்கல் என்றே சொல்லவேண்டும் ,,,,வெளி வேடதாரிகள் ,,,,
அன்வர் இல்லை அதுதான் இவர்களின் சதி தொலையட்டும் பாஸ்…பி கே ஆர் ,டி ஏ பி தலைவர்களே உங்களுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது புதிய நண்பனை தேடுங்கள் அதிலும் நல்ல நண்பனாக இருபது முக்கியம் கூட்டனி அமையுங்கள் ஒருமித்த கருத்தோடு களம் இருங்கள் வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம் …