ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமும் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசும் சர்ச்சையிடுவதை நிறுத்த வேண்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இருவரும் இதற்கு ஒரு முடிவுகட்டும் தருணம் வந்து விட்டது”, என ரிஸால் மரைக்கான் நைனா மரைக்கான் கூறினார்.
“ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும். மக்கள் ஒரு அசிங்கமான காட்சியைக் காண விரும்பவில்லை.
“எனவே, அமைச்சர் மட்டுமின்றி இளவரசரும் (அதற்கு முடிவுகட்ட) முன்வர வேண்டும்”, என்றவர் கூறினார்.

























மக்கள் நலன் பால் அரசினர் கருத்துரைப்பது அரசியலில் மூக்கை நுழைப்பதாகுமா??? காணாமல் போனாதாக கூறப்படும் மக்கள் வரிப்பணத்துக்கு விளக்கம் வேண்டுமென்றுதானே கேட்டார்??? தாம் பிரதமராக வேண்டுமென்றோ அல்லது அமைச்சராகவேண்டுமென்றோ கேட்கவில்லையே!!
‘ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற கலந்துரையாடலில் ஓடி “ஒளியாமல்” பிரதமர் கலந்து கொண்டிருந்தால், இந்த சர்ச்சை ஏற்படிருக்காதே, என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணருவார்களா ?
“அசிங்கமான காட்சி” என்று நீங்களாக ஏன் கற்பனை செய்து கொள்ளுகிறீர்கள்? பினாங்கில் நீங்கள் செய்யாத அசிங்கமா!
அண்ணன் ஒரு பக்கம் என்றால் தம்பி இன்னொரு பக்கம் ஜோகூர் மாநிலம் கூட்டரசில் சேர்ந்த உடன்படிக்கையை பின் பற்றாவிட்டால் கூட்டரசில் இருந்து பிரிந்து போக நேரிடலாம் என்று சொன்னதாக பிற இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாம்புக்கு பாலை வார்த்த அம்னோவின் இன்றைய நிலையைப் பாருங்கள். அம்னோவுக்கு இது ஒரு நல்ல பாடம்.
ஆட்சியாளர்களை அவமதித்த குற்றத்திற்கு முதலில் தண்டனையை நிறைவேற்றுங்கள் பார்போம்.நாடு எங்கே பொய் கொண்டிருக்கிறது.ஒரு ஆட்சியாலருக்கே,இந்த கதி என்றால் சாதாரண குடிமகனின் நிலை என்னவாகும் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா.மக்களாட்ச்சியில் மக்கள் மதிக்க படுவதில்லை.மக்களுக்காக வாதாடும் ஆட்சியாளர்களையும் மதிப்பதில்லை என்றால், நாடு வளர்ச்சி அடைந்து என்ன பயன்.மக்களை பாதுகாக்கவே சட்டம்,தண்டிக்க அல்ல.பாரபட்சமின்றி சட்டய்த்தை நிறைவேற்றுங்கள்.அப்பொழுதுதான் பயந்து கடமையை செய்வார்கள்.