அரசாங்க இரகசியங்களை வெளியிடக் கூடாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்க அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
இன்று புத்ரா ஜெயா மாநாட்டு மையத்தில் உரையாற்றிய பிரதமர், அண்மையில் சில இரகசியங்கள் “கசிந்திருப்பதாக”க் கூறினார்.
“கடந்த சில நாள்களாக பல இரகசியங்கள் வெளியாகியுள்ளன. அதனால் அரசாங்க இரகசியங்களைத் தயவு செய்து பாதுகாப்பீர்.
“அரசாங்கத் துறை ஒரு முடிவை அறிவிப்பதற்குத் தயாராக இல்லாதபோது நீங்கள் முந்திக்கொண்டு வெளிப்படுத்தி விடாதீர்கள். ஏனென்றால் முடிவு பின்னர் வேறு மாதிரியாக இருக்கலாம்”, என்றாரவர்.
“டோல் கட்டண விவகாரத்தில் நடந்ததைப் பாருங்கள். எதுவும் இறுதி செய்யப்படுமுன்னர் அது வெளியில் கசிந்து விட்டது”.
நாட்டின் நலனை முன்னிட்டு அரசு அதிகாரிகள் இரகசியங்களைக் காக்க வேண்டும் என நஜிப் கேட்டுக்கொண்டார்.

























உண்மை நிலவரத்தைத்தானே வெளியிட்டார்கள். காற்றில்லாமல் மரம் அசையாது!!! நெருப்பில்லாமல் புகையாது!!! மக்களால், மக்கள் பிரதிநிதிகளாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களிடமே மறைப்பதா??? நாட்டின் நன்மைக்காக எடுக்கப்படும் முடிவுகளையோ முயற்சிகளையோ ஏன் முன்கூட்டியே மக்களிடமிருந்தும் ஆலோசனை பெறலாமே!!!! நீங்கள் முடிவெடுத்த பிறகு மக்கள் வலுக்கட்டாயமாய் செயல்படுத்த (சர்வாதிகார ஆட்சி) தானே நடத்துகிறீர்??? இதுதான் உங்களுக்கு மக்களாட்சியா???
எந்த ரகசியம்,,, உங்களுக்கு தெரிந்த அந்த MH 370 முன்கூட்டிய காணாமல் போக போகுது என்ற ரகசியமா
மக்கள் சேவகன் என்பதை மறக்கும் ….திருடர்கள் !
நஜிப் : அரசாங்க இரகசியங்களை வெளியிடாதீர் !!!
அரசாங்க ஊழியர்கள் : அரசாங்க இரகசியங்கள் வெளியானது தொடர்பான விவரங்களை, அரசாங்கத்திற்குகூட தெரியாதபடி இரகசியமாக வைத்திருப்போம், இது OK-வா ?
நஜிப் : ம்..ம்..ம் ???
ரகசியம் வெளியாகா விட்டாலும்,மக்களை கஷ்டப்படுத்தி பணம் பண்ணும் திட்டம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கும் அய்யா.இந்த ரகசியம் வெளியானதினால் ஒரு படு மோசமான திட்டம் நிலுவையில் வந்து விட்ட கோபம் தாங்களுக்கு.இனிமேலாவது மக்கள் கருத்து கேட்கும் உங்கள் முந்தய நடைமுறையை செயல் பாட்டுக்கு கொண்டுவாருங்கள்.உங்கள் ஆட்சி காப்பாற்ற படும்.குடிமக்களால்தான் உங்களை காப்பாற்ற முடியும் என்பதை நம்புங்கள்.உங்களின் சபையில் தலைகனம் பிடித்து மக்களையும் ஆட்சியாளர்களையும் மதிக்க மனமில்லாமல்,நாக்கில் நரம்பில்லா கொச்சை வார்த்தைகள் பேசியும்,ஆள்கடத்தல்,உள்நாட்டு இன கொந்தளிப்பில் தெரியாதது போல் இருந்து கொண்டும் உங்களுக்கு மேலும் பல தலை வழிகளை கொடுத்து கொண்டிருக்கும் மந்திரிகளை கலை எடுங்கள்.பொறுப்புள்ள மந்திரிகல்,அரசாங்க ஊழியர்கள் எல்லாம் கடமை உணர்வோடு வேலை செய்தும் ஆகாய விமானம் காணமல் போவது என்ன,கடலில் கப்பல் காணாமல் போவது என்ன ?நாட்டை முன்னேற்றும் முயற்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களின் நலனில் கவனம் இருக்கட்டும்.ஒவ்வொரு வீடும் நாட்டு மக்களும் நிம்மதியாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.நாடு காணமல் போவதற்குள். என்ன நான் சொல்றது.
மக்கள் பணத்தை கொள்ளயடிப்பிர்கள். நல்ல மனிதாபிகள் அதை வெளியிட்டால் கொந்தளிப்பிர்கள்.என்னையா நியாயம்.உங்களுக்கு ஒரு நீதி , மற்றவர்கள்ளுக்கு ஒரு நீதியா? இதுதான் உங்களுடைய சத்து மலேசியாவா.
இலஞ்சம் வாங்கும் இரகசியமா ,,,,, அது நாட்டு மக்களுக்கு தெரிந்த இரகசியம் ,,,,தெரியாத இரகசியம் ,,,,, எவ்வளவு என்பது இரகசியமாக தானே வுள்ளது,,,,,, ஏன் அச்சம் ,,,,